Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில், திருமலைவையாவூர், செங்கல்பட்டு – 603 308 காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44 – 6747 1398, 94432 39005, 99940 95187 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் 12.30 மணி வரை, மாலை மணி 4 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்னவெங்கடேசர்
உற்சவர் சீனிவாசர், கள்ளபிரான்
தாயார் அலர்மேலுமங்கை
தீர்த்தம் வராகதீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருமலைவையாவூர்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சப்தகிரி என விளங்கும் திருவேங்கடத்திற்கு இணையான மற்றொரு திருத்தலம் என பக்தர்களால் பூஜிக்கப்படுவது திருமலைவையாவூர் ஆகும். மிகப் பழைமையானது இத்திருக்கோயில்.

இத்திருக்கோயில், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் எனவும், தென்திருப்பதி ஸ்ரீ வைகுந்தகிரி, தென் வேங்கடகிரி, தென் சேஷகிரி, வராக ஷேத்திரம், தென் கருடகிரி, ராமானுஜ யோககிரி எனப் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு திகழ்கிறது.

புராண காலத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த யுத்தத்தில், இலட்சுமணன் சக்தி எனும் அஸ்திரத்தினால் அடிபட்டு, மயங்கி விழுந்தான். அந்த மயக்கம் தீர, அனுமன் வடக்கு நோக்கிச் சென்று சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கை நோக்கிச் செல்லும் வழியில், தட்சிண கருடகிரி எனும் இத்திருமலைவையாவூரை வானில் கடக்கும்போது, இம்மலைமீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ வராகப் பெருமானையும், ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமானையும் தரிசித்து வணங்கினார். அப்போது தனது வலது கரத்திலிருந்த சஞ்சீவி மலையைக் கீழே வைக்காமல், தனது இடது கரத்திற்கு மாற்றிக்கொண்டார், ஸ்ரீராம பக்தரான ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையை கீழே வைக்காமலேயே, தனது மற்றொரு கரத்திற்கு மாற்றிய இடமாதலால், இத்தலம் திருமலைவையாவூர் எனக் காரணப் பெயர் பெற்றது. இங்கு எழுந்தருளியுள்ள அனுமன் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் என பக்தர்களால் பூஜிக்கப்படுகிறார்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில், பாதூர் – 606 115. விழுப்புரம் மாவட்டம்

+91- 4149 – 209 789, 93626 20173 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பிரசன்னவெங்கடேசர்
உற்சவர் அழகர்
தாயார் அலமேலு மங்கை
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் பாதூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனின் மனைவி, தன் முன்வினைப்பயனால், தீராத தோல் வியாதியால் பாதிக்கப்பட்டாள். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் வியாதி குணமாகவில்லை. அவளது நோய் அதிகமாகி, அழகு மங்கியது. எனவே மன்னனுக்கு மனைவி மீதிருந்த அன்பு கொஞ்சம், கொஞ்சமாக மறையத்துவங்கியது. ஒருகட்டத்தில் அவளை வெறுத்து ஒதுக்கிய அவன், வேறொரு பெண்ணைத் திருமணம் செய்ய நினைத்தான். கணவனின் எண்ணத்தை அறிந்த மனைவி மிகவும் வருந்தினாள். தனது நோய் நீங்கவும், கணவனின் எண்ணத்தை மாற்றவும் வேண்டி இத்தலத்தில் பெருமாளை வேண்டினாள். அவளது பக்தியில் மகிழ்ந்த பெருமாள், வியாதியை நீக்கி அருளியதோடு, அவளை முன்பிருந்ததைவிட மேலும் அழகாக மாற்றினார். மன்னனுக்கும் நற்புத்தி கொடுத்தார். மன்னனும், வேறு திருமணம் முடிக்கும் எண்ணத்தை விட்டு, தன் மனைவியுடன் இல்லறம் நடத்தினான்.

மூலஸ்தானத்தில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளு கிறார். தாயார் அலமேலு மங்கை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், விஷ்வக்சேனர், மத்வாச்சாரியார், ராமானுஜர், மகாதேசிகன் ஆகியோருக்கும் சன்னதி இருக்கிறது. கொடிமரத்தின் அருகே கருடாழ்வாரும், ஆஞ்சநேயரும் உள்ளனர்.