Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம்

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221223; 91-4573-221255 (மாற்றங்களுக்குட்பட்டவை)

ராமருக்கே தோஷம் நீக்கிய தலம்

ஸ்ரீராம தீர்த்தம், ராமேஸ்வரம் திருத்தலத்தில், ராமநாதர் கோயிலுக்கு வெளியே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ராமபிரான், நாகர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்கிறார்கள். ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்கு வழி கிடைக்க, திருப்புல்லாணிக்கு அருகிலிருக்கும் கடலில் நவபாஷாணக் கல்லில் நவகிரகங்கள் நிறுவி வழிபட்டார் ராமர். அத்துடன் திருப்புல்லாணி தலத்தில் தர்ப்பையில் அமர்ந்து கடலரசனிடம், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைக்க வழி கேட்டார். பிறகு, இலங்கைக்கு அனுமன் மற்றும் வானரப் படைகள் உதவியுடன் பாலம் அமைத்துச் சென்று இராவணனோடு போரிட்டு சீதையை மீட்டார். இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரை (அக்னி தீர்த்தம்) அருகில் சிவலிங்கம் நிறுவி பூஜித்து, தோஷ நிவர்த்தி பெற்றார். இராமர் நிறுவிய இலிங்கம்தான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இராமநாதர்.

அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம்

அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில், நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர்
உற்சவர் விஜயராஜன்
தாயார் செங்கமலவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் நெடுங்குன்றம்
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு

இலங்கையில் இராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார். இராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை இராமனிடம் கொடுத்தார். அதை இராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்து, தம்பியாகிய இலட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.