Category Archives: ஆலயங்கள்

அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு

அருள்மிகு அனவரத தாண்டவேஸ்வரர், அரடாப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு: 98432 76679,

94432 24448

பஞ்சபூதத் தலங்களுள் அக்னித் தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை.

தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய திருக்கோயில்களுள் ஒன்று இது. பிரமாண்டமான ஒரு நெருப்புக் குழம்பே, பின்னாளில் குளிர்ந்து திருவண்ணாமலையாக மாறியது என்கிறது புராணம். இங்கு குடி கொண்ட இறைவனார் அருணாசலேஸ்வரர் என்றும் அண்ணாமலையார் என்றும் ஆதி காலத்தில் இருந்தே வணங்கப்பட்டு வருகிறார். இந்த அக்னி மலையையே சிவ சொரூபமாக எண்ணி வணங்குவார்கள் பக்தர்கள். எனவேதான், இந்த மலையை வலம் வந்து வணங்குவது சிறப்பு.

அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 98653 44297

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அனந்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தரநாயகி
தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தில்லைவனம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பூசித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.