Category Archives: ஆலயங்கள்

அட்டாள சொக்கநாதர் கோயில், மேலப்பெருங்கரை

அருள்மிகு அட்டாள சொக்கநாதர் கோயில், ராமேஸ்வரம் சாலை, மேலப்பெருங்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.

+91- 94420 47977, 99767 11487

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்

மூலவர் அட்டாள சொக்கநாதர்
உற்சவர் பிரதோஷ நாயனார்
அம்மன் அங்கயற்கண்ணி
தல விருட்சம் சரக்கொன்றை
தீர்த்தம் கிணறு
ஆகமம் காரணாகமம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் மேலப்பெருங்கரை
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

 

முற்காலத்தில் இப்பகுதி கடம்ப வனமாக இருந்தது. தர்மங்கள் பல செய்த ஒருவன், அறியாமல் சில தவறுகள் செய்ததால் கரிக்குருவியாகப் பிறந்திருந்தான். பிற பறவைகளால் துன்புறவே, வருத்தமடைந்த கரிக்குருவி இப்பகுதிக்கு வந்தது. ஒரு மரத்தில் அமர்ந்து தனக்கு உண்டான நிலைக்கு விமோசனம் கிடைக்க வழி கிடைக்காதா? என்ற வருந்தியது. அம்மரத்தின் அடியில் முனிவர் ஒருவர், தன் சீடர்களுக்கு சிவனைப் பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது,”எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவராக இருந்தாலும், மதுரைத் தலத்தில் உறையும் சொக்கநாதர் அருள் இருந்தால் பாவ விமோசனம் கிடைக்கும்என்றார்.

அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர், நாமக்கல்மாவட்டம்.

+91- 4286 – 257 018, 94433 57139

காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அசலதீபேஸ்வரர், குமரீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் மதுகரவேணியம்பிகை, குமராயி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் மகனூர்
ஊர் மோகனூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

கைலாயத்தில் நாரதர் கொடுத்த கனியை சிவன், விநாயகரிடம் கொடுத்ததால் கோபம் கொண்ட முருகன், தென்திசை நோக்கி கிளம்பினார். சிவனும், அம்பிகையும் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. அம்பிகை அவரை பின்தொடர்ந்தாள். சிவனும் உடன் வந்தார். மயில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த முருகனை அம்பிகை நிற்கும்படி கூறினாள். தாயின் சொற்கேட்ட மகன் நின்றார். அம்பிகை அவரை கைலாயத்திற்கு திரும்பும்படி அழைத்தாள். ஆனால் முருகன், தான் தனியே இருக்க விரும்புவதாக கூறி, பழநிக்குச் சென்றார். இவ்வாறு முருகனை அம்பிகை அழைக்க அவர் வழியில் நின்ற தலம் இது. இவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். இவரே இத்தலத்தில் அசலதீபேஸ்வரராக காட்சி தருகிறார்.