Category Archives: ஆலயங்கள்

அர்த்தநாரீஸ்வரர் கோயில், ரிஷிவந்தியம்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரிஷிவந்தியம், விழுப்புரம் மாவட்டம்.

+91 – 4151 -243 289.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்
அம்மன் முத்தாம்பிகை
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் அகஸ்த்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் ரிஷிவந்தியம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்த போது, தென்திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரைத் தென்திசை செல்ல சிவன் உத்தரவிட்டார்.

அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர்

அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் கோயில், கடத்தூர், கோவை மாவட்டம்

காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

இறைவன்: அர்ச்சுனேஸ்வரர்

அம்மன் : கோமதியம்மை

விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் காரத்தொழுவு என்ற கிராமத்தில் இருந்து கொங்கேலசங்கு என்ற கிராமத்திற்கு தினமும் 60 குடம் பால் சென்றுகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடம் பால் மட்டும் சிந்தியது. அந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது ரத்தம் பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து இரத்த ஆறாக மாறிவிட்டது. பயந்துபோன மக்கள் அவ்விடத்தை ஆராய்ந்துபார்த்தனர். பால் விழுந்த இடத்தைத் தோண்டியபோது உள்ளே ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் தலையில் வெட்டுப்பட்டிருந்தது. இப்போதும் இந்த லிங்கத்தின் தலையில் வெட்டுக்காயம் இருக்கிறது. சுயம்பு இலிங்கமாக வெளிப்பட்ட சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளினார். பத்தாம் நூற்றாண்டில் இந்த கோயில் எழுப்பப்பட்டது.