Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம், காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.

+91-94435 97107, 98943 88279 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்
தாயார் கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் கவுரி தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கார்வானம்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கார்வானத்துள்ளாய் கள்வாஎன இத்தலத்து பெருமாளின் பெயரையும் சேர்த்து திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம். உலகளந்த பெருமாள் கோயிலுக்குள் இருக்கும் திருநீரகம், திருக்காரகம் ஆகிய இரண்டிற்கும் இல்லாத தனிச்சிறப்பு பெற்றது இத்தலம். “நீரகத்தாய்“, “காரகத்தாய்என திவ்ய தேசத்தை மட்டும் மங்களாசாசனம் செய்த திருமங்கையாழ்வார், இதை மங்களாசாசனம் செய்யும் போது மட்டும் பெருமாளின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்து விட்டார். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்காரகம் ஆகிய இந்த மூன்று தலங்களும் திருஊரகத்துடன்வந்து விட்டதா?. அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 94435 97107, 98943 88279 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருணாகரப்பெருமாள்
தாயார் பத்மாமணி நாச்சியார்
தீர்த்தம் அக்ராய தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் திருக்காரகம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்தப் பெருமாளைக் குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் காரகம்எனப்பட்டது என்பர்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளினார். அப்போதே இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம், திருஊரகம் ஆகிய மூன்று தலங்களும் இந்தக் கோயிலிக்குள் வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்தக் காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.