அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் (கருணாகரப்பெருமாள்) கோயில், திருக்காரகம், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 94435 97107, 98943 88279 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கருணாகரப்பெருமாள்
தாயார் பத்மாமணி நாச்சியார்
தீர்த்தம் அக்ராய தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்பு
ஊர் திருக்காரகம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்தப் பெருமாளைக் குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் காரகம்எனப்பட்டது என்பர்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளினார். அப்போதே இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம், திருஊரகம் ஆகிய மூன்று தலங்களும் இந்தக் கோயிலிக்குள் வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்தக் காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இது திருக்காரகம் எனப்படும். இது உலகளந்த பெருமாள் கோயிலின் உள்ளேயே உள்ள திவ்ய தேசம் ஆகும். இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும், பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.
ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்யதேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் வாமன விமானம் எனப்படும். இத்தல இறைவன் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.

மங்களாசாஸனம்
திருமங்கையாழ்வார்
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.
திருமங்கையாழ்வார்

திருவிழா வைகுண்ட ஏகாதசி

 

பிரார்த்தனை:

இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். ஆணவம் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்

பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை

தங்கும் வசதி : காஞ்சிபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *