Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருசாளக்கிராமம்

அருள்மிகு ஸ்ரீமூர்த்தி திருக்கோயில், திருச்சாளக்கிராமம், நேப்பாளம் (சாளக்கிராமம்)

மூலவர் ஸ்ரீமூர்த்தி – (முக்திநாத் / முக்தி நாராயணன்) (ஸ்வயம்பூ மூர்த்தி)
கண்டவர்கள் ப்ரம்மா, ருத்ரர், கண்டகி
தாயார் ஸ்ரீதேவி நாச்சியார்
விமானம் கனக விமானம்
தீர்த்தம் ஸ்ரீசக்ர தீர்த்தம்

பாடியவர்கள்:

பெரியாழ்வார் – 2பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் 10பாசுரங்கள்.

சாளக்கிராம க்ஷேத்ரம் கண்டகி நதிப்படுகையில், கணக்கிலடங்கா சாளக்கிராம சிலைகள் விளங்குகின்றன. பாக்கியமுள்ள பக்தர்கள் அங்கு சென்று சாளக்கிராம மூர்த்திகளை, தாங்களே சேகரித்து எடுத்து வருகின்றனர். பக்தர்கள் வழிபாடு செய்ய எம்பெருமான் சாளக்கிராம மூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வருகிறார்.

அர்ச்சனை செய்யப்படும் மூர்த்திகளில்(விக்ரகம்) புனிதம் ஏற்பட முதலில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும். இது மிகவும் அவசியம். ஆராதனை செய்பவர்கள் ஆசார்யர்களிடம் இதற்கான தீக்ஷை பெறவேண்டும். தீக்ஷை பெற்றவர்கள்தான் மூர்த்தியை ஆராதனை செய்யத் தகுதிபெற்றவர்கள்.

ஆனால் எம்பெருமானின் புனிதமுள்ள சாளக்கிராம மூர்த்தியை ஆராதிக்க பிரதிஷ்டையோ, இதற்கான விசேஷ தீக்ஷையோ பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆசார்ய அனுக்கிரகமும், மேலும் ஆசார்யன் மூலம் ஆராதனை மந்திரங்களை உபதேசம் பெற்று, ஆராதனை செய்யலாம்.

சாளக்கிராம மூர்த்திகள், இமாலயத்திலிருந்து (சாளக் கிராம சிகரம்) உற்பத்தியாகும் கண்டகி நதிப்படுகையில் சக்ர தீர்த்தம் என்ற புனிதமான இடத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இதன் அளவு சிறிய மிளகிலிருந்து பெரிய மாம்பழம் வரை பெரிதாகவும், அபூர்வமான சில சாளக்கிராம மூர்த்திகளில் ஸ்வர்ணரேகையும் இருக்கும். இதனால் அந்த நதி அங்கு ஹிரண்யவதிஎன்றும் கூறப்படுகிறது.

சில சாளக்கிராம மூர்த்திகள் அபூர்வமாக, வெள்ளை, நீலம், சிகப்பு வர்ணங்கள் உள்ளதாகவும் இருக்கும். இவைகளின் மதிப்பு நிர்ணயிக்க முடியாதது. இப்படிப்பட்ட சாளக்கிராம மூர்த்திகள் தெய்வ சங்கல்பம் இருந்தால்தான் கிடைக்கும்.

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி

அருள்மிகு ஆதிஜெகநாதப் பெருமாள் திருக்கோயில், திருப்புல்லாணி – 623 532 ராமநாதபுரம் மாவட்டம். +91-4567- 254 527 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 .30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன்), கல்யாண ஜகநாதர்
உற்சவர் கல்யாண ஜெகந்நாதர்
தாயார் கல்யாணவல்லி, பத்மாசனி
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்புல்லணை
ஊர் திருப்புல்லாணி
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

72 சதுர் யுகங்களுக்கு முன்பு புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய(தற்போது கோயில் அமைந்துள்ள இடமான) திருப்புல்லாணி காட்டில், பெருமாளைவேண்டிக் கடும் தவம் செய்து வந்தனர். இவர்களின் தவத்தினால் அகமகிழ்ந்த பெருமாள் அரச மரமாக இவர்கள் முன்பு காட்சியளித்தார். அதைக் கண்டு மகரிஷிகள் மகிழ்ந்தாலும் பெருமாளிடம் உண்மையான சொரூபத்தில் காட்சியளிக்கும்படி வேண்டினர். உடனே மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று ஆதிஜெகநாத பெருமாளாகக் காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம்.

பிற்காலத்தில் தாயார் பத்மாசினிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்.