Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்.

+91- 44-2723 1899 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாண்டவ தூதர்
தாயார் சத்யபாமா, ருக்மணி
தீர்த்தம் மத்ஸ்ய தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பாடகம்
ஊர் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் தூது சென்றவர் பகவான் கிருஷ்ணர். இவர் தான் பாண்டவர்களின் மிகப்பெரிய பலம். இவரை அவமானப்படுத்த நினைத்தான் துரியோதனன்.

எனவே கண்ணன் தூது சென்ற போது அவர் அமர்வதற்காக போடப்பட்ட ஆசனத்தின் கீழே, பூமியில் ஒரு பெரிய நிலவறையை உண்டாக்கி, அதன்மீது பசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க வந்த மல்லர்களை அழித்து விஸ்வரூப தரிசனம் காட்டினார்.

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை

அருள்மிகு நித்ய கல்யாணப் பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை– 603112, கோவளம் அருகில், புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கறை சாலை. காஞ்சிபுரம் மாவட்டம்.

+91 -44- 2747 2235,98405 99310, 98409 36927 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நித்ய கல்யாணர், லட்சுமிவராகப்பெருமாள்
உற்சவர் நித்யகல்யாணப்பெருமாள்
தாயார் கோமளவல்லித்தாயார்
தல விருட்சம் புன்னை, ஆனை
தீர்த்தம் வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வராகபுரி
ஊர் திருவிடந்தை
மாவட்டம் காஞ்சிபுரம்
மாநிலம் தமிழ்நாடு

திரேதாயுகத்தில் மேகநாதன் என்ற அரசனின் புதல்வன் பலி நல்லாட்சி புரிந்து வந்தான். அக்காலத்தில் மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர்புரிய பலியின் உதவியை நாடினர். பலி மறுத்து விட்டான். இதனால் அரக்கர்கள் தேவர்களுடன் சண்டையிட்டுத் தோற்று, பின் பலியிடம் மீண்டும் உதவி கேட்டனர். அரக்கர்களுக்காக, தேவர்களுடன் பலி சண்டையிட்டு வென்றான். இதனால் பலிக்கு, பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்க, பெருமாளைக் குறித்து இத்தலத்தில் தவமிருந்தான். தவத்திற்கு மெச்சிய பெருமாள் வராக ரூபத்தில் அவனுக்கு காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.

ஒருமுறை குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்லத் தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அங்கு வந்த நாரதர் அந்தப் பெண்ணிடம்,”நீ திருமணமாகதாவள். எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாதுஎன்று சொல்லி, அங்கிருந்த பிற முனிவர்களிடம் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார். காலவரிஷி என்பவர் அவளை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாராயணனை வேண்டித் தவமிருந்தார். நாராயணன் வரவில்லை. ஒருநாள் ஒரு பிரம்மச்சாரி வந்தான்.

திவ்யதேச யாத்திரைக்காக வந்ததாகக் கூறினான். அவனது தெய்வீக அழகு பெருமாளைப் போலவே இருக்கவே, தனது பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞனை வேண்டினார். அவன் ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் திருமணம் செய்து கொண்டான். கடைசி நாளில் அந்த இளைஞன் தன் சுயரூபம் காட்டினான். அது வேறு யாருமல்ல. வராகமூர்த்தி வடிவில் வந்த நாராயணன். அவர் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி, தனது இடப்பக்கத்தில் வைத்து கொண்டு சேவை சாதித்தார். திருவாகிய லட்சுமியை இடப்புறம் ஏற்றுக்கொண்ட எம்பெருமான் ஆனபடியால் இத்தலம் திருவிடவெந்தைஎனப்பட்டது. இது காலப்போக்கில் மருவி திருவிடந்தைஆனது.