Category Archives: சிவ ஆலயங்கள்

தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்


கண்டதொரு காட்சியென்ன அண்டபிண்டம்
……………கருவான ரவிமதியுஞ் சேர்ந்தமூலம்
ஒன்றான மூலமடா மவுனபீடம்
…………..ஓங்காரக் கம்பமடா நந்திவீடு
பண்பான வீடறிந்து சுழினைமேவி
…………..பார்மகனே போதமென்ற ஞானத்தீயை
குன்றான தீயதுதா னுந்தியுந்தி
………….குருவான செந்தீயடா சிகாரமாச்சே.

தஞ்சைப் பெரியகோயில்-சித்திரங்கள்


நந்தி மண்டபத்தின் மேற்கூறை சித்திரங்கள்
*************************************************
நந்தி மண்டபத்தின் மேள்புறம் உள்ள இச் சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இத்தனை காலமாகியும் அழியாத், மங்காத வண்ணக் கலவையின் உட்கூறு என்ன எனும் வினாதான் உடன் மனதில் எழுந்தது. வியப்போ வியப்பு!!