Category Archives: சிவ ஆலயங்கள்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்.

+91- 8221 – 226 245, 225 445, 227 239, 94487 50346, 99804 15727

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் பார்வதி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் முந்நதி சங்கமம்
ஆகமம் காமீகம், காரணாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் நஞ்சன்கூடு
மாவட்டம் மைசூரு
மாநிலம் கர்நாடகா

விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் கபிலா, கவுண்டினி, மணிகர்ணிகை என்னும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இத்தலத்தில் ஒரு யாகம் நடத்தும்படியும், அப்போது அங்கு வரும் அசுரனை யாக குண்டத்தில் வீசும்படியும் கூறினார். அதன்படி தேவர்கள் யாகம் நடத்தினர். கேசியனும் அங்கு வந்தான். அவனை வரவேற்பது போலப் பாவனை செய்த தேவர்கள், சமயம் பார்த்து யாக குண்டத்தில் வீசி விட்டனர். அப்போது சிவன், அக்னி வடிவில் இருந்து அவனை அழித்தார். மகிழ்ந்த தேவர்கள், அவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டினர். சிவனும் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளினார். விஷத்தின் வடிவமாக திகழ்ந்த அசுரனை அழித்ததால், “நஞ்சுண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இந்த இலிங்கம் மறைந்துவிட்டது. தந்தை ஜமதக்னியின் சொல்லுக்காக, தாய் ரேணுகாதேவியைக் கொன்ற பாவம் போக்க இங்கு வந்தார் பரசுராமர்.

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், காரமடை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91 4254 272 318, 273 018, 94420 16192

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நஞ்சுண்டேஸ்வரர்
உற்சவர் பிரதோஷ நாயனார்
அம்மன் லோகநாயகி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் தெப்பம்
ஆகமம் சிவாகமம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் காரமடை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அமுதம் பெற, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கயிறாகப் பயன்பட்ட வாசுகி நாகம், களைப்பில் நஞ்சை உமிழ்ந்தது. தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களைக் காக்க, நஞ்சை விழுங்கினார். அப்போது அம்பிகை, அவரது கழுத்தைப் பிடித்து நஞ்சு உடலுக்குள் செல்லாமல் நிறுத்தினாள். நஞ்சு கழுத்திலேயே தங்கியது. இந்த நிகழ்வின் அடிப்படையில் இத்தலத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

தேவர்களை காப்பதற்காக நஞ்சை உண்டவர் என்பதால் இவர், “நஞ்சுண்டேஸ்வரர்என்று பெயர் பெற்றார். திருநீலகண்டன் என்றும் இவருக்குப் பெயர் உண்டு.