Category Archives: பாடல் பெற்றவை

பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர்

அருள்மிகு பக்தஜனேசுவரர் திருக்கோயில், திருநாவலூர், விழுப்புரம் மாவட்டம்

+91- 94861 50804, 94433 82945, 04149-224 391

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பக்தஜனேசுவரர், ஜம்புநாதேசுவரர், திருநாவலீசுவரர்
அம்மன் மனோன்மணி, நாவலாம்பிகை, சுந்தர நாயகி
தல விருட்சம் நாவல்மரம்
தீர்த்தம் கோமுகி தீர்த்தம், கருட நதி
ஆகமம் காமிக ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஜம்புநாதபுரி, திருநாமநல்லூர்
ஊர் திருநாவலூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

அமிர்தத்தை கடைந்த காலத்தில், வாசுகி என்ற நாகத்தின் நஞ்சை, இறைவன் சாப்பிட்டு விடுகிறான். அதில் கொஞ்ச நஞ்சு, வித்தாக மாறி, பூமியில் விழுந்து நாவல் மரங்களாக முளைக்கப்பெற்றது. ஜம்புவனம் என்ற பெயரில் இந்த இடத்தில், இறைவன் தானாகத் தோன்றி, 4 யுகங்களாக இங்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கருவறை மட்டும் முழுவதும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களால் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இது மிகப் பழமையான கோயில் ஆகும். ஜம்புநாதேசுவரர் என்று வழங்கி வந்த காலங்களில், சுந்தரர், “ஜம்புஎன்ற வடமொழிப் பெயரை நாவல்என்று அழைத்து திருநாவலீசன்என்று ஈசனையும் திருநாம நல்லூர்என்று ஊர்ப்பெயரையும் பாடலில் அழைத்துள்ளார்.

இங்குதான், இறைவனையே தோழனாக பழகிய சுந்தரர் பிறந்தது. ஒரு முறை சுக்கிர பகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து, பிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவன், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினிமந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக்கொண்டார்கள். தேவ, அசுர போர் ஆரம்பமானது. தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனால், இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினிமந்திரத்தால் உயிர் பிழைக்க செய்தார். பயந்து போன தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவன் சுக்கிரனை அழைத்து, அவரை விழுங்கி விட்டார். சிவனின் வயிற்றில் பல காலம் யோகத்தில் இருந்தார் சுக்கிரன். பின்னர் அவரை வெளியே வரவழைத்து, நவக்கிரகத்தில் பதவியைக் கொடுத்து அனைவரும் செய்யும் பாவ புண்ணியத்திற்கேற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். பின்னர் சுக்கிரனுக்கு நான்கு குமாரர்கள், இரண்டு புதல்வியர் பிறந்தனர். அவர் பூலோகம் வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். இந்த இடமே இன்றைய திருநாவலூர் ஆகும். இங்கு வருவோருக்கு சுக்கிர கிரகம் தொடர்பான தோஷம் விலகி, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்

அருள்மிகு பாடலீசுவரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்.

+91-4142- 236 728

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாடலீசுவரர் (பாடலீசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான்)
அம்மன் பெரியநாயகி ( பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரகந்நாயகி)
தல விருட்சம் பாதிரிமரம்
தீர்த்தம் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்),சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கடைஞாழல், கூடலூர் புதுநகரம்
ஊர் திருப்பாதிரிபுலியூர்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்

உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு, இறைவன் திருவிளையாடல் நிகழ்த்தத் திருவுளங்கொண்டு இறைவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களைப் பிராட்டி தன் திருக்கரங்களால் பொத்தினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன், இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ, அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக(உருவமில்லாமல்) இறைவனைப் பூசித்துப் பேறு பெற்ற தலம். இறைவன் சித்தர் வடிவம் பூண்டு, மக்களின் துன்பங்களை நீக்கிய தலம்.

பள்ளியறை: இறைவி அரூபமாக (உருவமில்லாமல்)இருந்து இறைவனை எண்ணித் தவம் இருந்த இடம். பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. அண்ணல் ஆயிரங்கலைகளோடு உறையும் இடம் ஆதலால், அவனைப் பூசித்துத் தவமியற்றி மணம் புரிந்து கொண்ட அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள். ஐங்கரன் கரங்களில் ஆயிதமேதுமின்றி பாதிரி மலர்க் கொத்துக்கள் உள்ளது வேறு எங்கும் காணமுடியாது.