Category Archives: பாடல் பெற்றவை

சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்)

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்), உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

+91- 4146-206 700

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர்
அம்மன் சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் முண்டீச்சரம், திருக்கண்டீச்சரம்
ஊர் கிராமம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருநாவுக்கரசர்

சிவனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் முண்டீச்சரம்எனப்பட்டது. “முடீச்சரம்என்பதே இத்தலத்தின் புராணப்பெயராக இருந்துள்ளது. இதுவே காலப்போக்கில் திருமுண்டீச்சரம்ஆனது என்பர்.

துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இப்பகுதில் இருந்த குளத்தில் அதிசயமான தாமரை மலரைக்கண்டான். தன் சேவகர்களை அனுப்பி அந்த மலரை பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்களால் அந்த மலரைப் பறிக்க முடியவில்லை. மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக்கண்ட மன்னன் மயங்கி விழுந்தான். அந்த மலரின் நடுவில் இலிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். இலிங்கத்தின் மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது. இதனால் இறைவன் முடீஸ்வரர்எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் மவுலி கிராமம்என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் முடிஅல்லது கிரீடம் என்று பொருள். காலப்போக்கில் மக்கள் மவுலியை விட்டு கிராமம் என அழைக்கத்தொடங்கினார்கள்.

கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்

அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர், விழுப்புரம் மாவட்டம்.

+91-93456 60711

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி 8முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
அம்மன் மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்)
தல விருட்சம் மூங்கில் மரம்
தீர்த்தம் தண்டுத்தீர்த்தம்(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர்
ஊர் வெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் சுந்தரர்

தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி இயற்றி, சிவபெருமானைக் கொல்ல ஏவினர். அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்றுக் வைத்துக் கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன் அவர்களது தவறைப் பொறுத்து அருள் புரிந்தார். எனவே இவ்வாலயம் அருட்டுறை (அருள் துறை) எனப்பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை எண்ணி இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் கிருபாபுரீசுவரர்எனப்பெயர் பெற்றார்.

மறைகள் இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில், இறைவன் தீயுருவாகத் தோன்றினான். அவை கேட்டுக் கொண்டபடி இங்கு சுயம்பு இலிங்கமாக எழுந்தருளினான்.

திருமண நாளன்று திருநாவலூரில் திருமணக்கோலத்திலிருந்த சுந்தரரை வயதான வேடம் கொண்டு ஈசன் தடுத்தாட்கொண்டார். “நீ எனக்கு அடிமைஎன்று கூறி அதற்கான ஆதாரத்தையும் அங்கு கூடியிருந்தவர்களிடம் காட்ட, அதிலுள்ள கையெழுத்து உண்மையானதுதான் என்பதை அறிந்த பெரியோர்கள் சுந்தரரை கிழவருக்கு அடிமையாக போகச் சொன்னார்கள். கோபம் கொண்ட சுந்தரர் கிழவரை, “பித்தன் கிறுக்கன்என்றெல்லாம் திட்டினார். அதையெல்லாம் பொருட்படுத்தாத கிழவர் சுந்தரரை அழைத்துக் கொண்டு இந்த திருவெண்ணெய்நல்லூர் கோயிலுக்குள் சென்று மறைந்தார். வந்தது இறைவன்தான் என்பதை அறிந்த சுந்தரர் ஈசனை வணங்கி நிற்க, “என்னப் பற்றி பாடுஎன்று ஈசுவரன் கேட்க, “எப்படிப் பாடுவதுஎன்று சுந்தரர் கேட்க, “என்னைப் பித்தா என்று திட்டினாயே! அதையே பாடுஎன்று அடியெடுத்துக் கொடுத்தார். அப்போதுதான் சுந்தரர் பித்தா பிறைசூடி பெருமானேஎன்ற புகழ் பெற்ற பாடலைப் பாடினார். அதிலிருந்து ஈசன் எழுந்தருளியிருக்கும் தலம்தோறும் சென்று திருப்பதிகங்கள் பாடி அற்புதங்கள் நிகழ்த்தி ஆண்டவனின் அறநெறியை பரவச் செய்தார்.