Category Archives: பாடல் பெற்றவை

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர்

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கிளியனூர், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம்.

+91 – 94427 86709 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் அக்னி, கன்வ தீர்த்தம்
பழமை 1200 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கிளிஞனூர், திருக்கிளியன்னவூர்
ஊர் கிளியனூர்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞான சம்பந்தர்

இன்று சிற்றூராகக் காட்சி அளிக்கும் கிளியனூர் கி.பி.6-ம் மற்றும் 7-ம் நூற்றாண்டில் சிறப்புற்ற ஊராக இருந்ததை கல்வெட்டுக்கள் மூலம் அறிகிறோம். கிள்ளி என்பது பழங்காலச் சோழர்களின் பொதுப் பெயர். உதாரணமாக நெடுங்கிள்ளி, கிள்ளிவளவன் முதலிய சோழ மன்னர் பெயர்கள் நம் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன.

சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர்என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர்என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர்என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில், இடைக்காலத்துச் சோழமன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், இரும்பை, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.

+91- 413 – 268 8943, 98435 26601 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மகாகாளேஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் குயில்மொழி நாயகி
தல விருட்சம் புன்னை
தீர்த்தம் மாகாள தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருஇரும்பை மாகாளம்
ஊர் இரும்பை
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களைப் பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மகத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கித் தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.

பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது, வடக்கே உஜ்ஜயினியில் ஒரு இலிங்கத்தையும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு இலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து, இங்கேயும் இலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் மகாகாளநாதர்என்ற பெயர் பெற்றார்.