Category Archives: கணபதி ஆலயங்கள்

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம்

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், காணிப்பாக்கம், சித்தூர், ஆந்திரா

+91- 8573 – 281 540, 281 640, 281 747 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – வரசித்தி விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – காணிப்பாக்கம்

மாவட்டம்: – சித்தூர்

மாநிலம்: – ஆந்திரா

தல வரலாறு:

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களால் பேசமுடியாது; பார்க்க முடியாது; கேட்க முடியாது. இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த இன்னல் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்கச் சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர்

அருள்மிகு வாகனப் பிள்ளையார் திருக்கோயில், ஆத்தூர், சேலம் மாவட்டம்

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – விநாயகர்

பழமை: – 200 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆத்தூர்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

ஆத்தூர் நகரத்தில் வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும். 200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் கண்டெடுத்த மக்கள், ஊருக்குள் ஓரிடத்தில் பிரதிட்டை செய்தனர். வெள்ளத்தில் மிதந்து வந்த பிள்ளையார் என்பதால், “வெள்ளம் பிள்ளையார்என்று பெயரும் சூட்டினர். காலப் போக்கில் அவர் வெள்ளைப் பிள்ளையார் ஆனார்.