Category Archives: கணபதி ஆலயங்கள்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்

அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம், சேலம் மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ராஜகணபதி

பழமை: – 400 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – சைலதேசம்

ஊர்: – சேலம்

மாவட்டம்: – சேலம்

மாநிலம்: – தமிழ்நாடு

400 ஆண்டுகளுக்கு முன் சேலம் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டது. கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் சைலதேசம்என பெயர் பெற்றது.

சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் கணபதியை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரசுவதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராச்சியத்தைப் பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்களின் வருகையை அதிகப்படுத்தியது. சுகவனேஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.

இவர் தினமும் அரச அலங்காரத்தில் காட்சி தருவதால் ராஜ கணபதிஎன அழைக்கப்படுகிறார்.

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயில் உடுமலைப்பேட்டை– 642126 கோயம்புத்தூர் மாவட்டம்

+91 – 4252 221 048(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்:பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்)

உற்சவர்:விநாயகர்

தல விருட்சம்: வன்னி , வில்வம், அரசு தீர்த்தம்:கிணற்றுநீர்

பழமை:500 வருடங்களுக்கு முன்

ஊர்:உடுமலைப்பேட்டை

மாவட்டம்: கோயம்புத்தூர்

மாநிலம்: தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் வனமாக இருந்த இப்பகுதியை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இயற்கையாகவே பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இப்பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும் எளிதில் நெருங்க முடியாததால், திப்புசுல்தான் தனி ராச்சியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார். ஒர் நாள், அவரது கனவில் விநாயகர் தோன்றி, “உன் நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! என்றாராம். அதைக்கேட்ட திப்புசுல்தான், காணிக்கை கேட்ட விநாயகருக்காக, அவரையே காணிக்கையாக வைத்து, ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில், ஆட்சி செய்த பலராலும் இக்கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில் பெரியளவில் கட்டப்பட்டது.

திப்புசுல்தானால் வணங்கப்பட்ட ஆதிவிநாயகர், காசிவிஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இத்தலம் சிறந்த சைவ வைணவ இணைப்பு பாலமாகவும், மும்மூர்த்திகள் அமைந்த தலமாகவும் திகழ்கிறது.