Category Archives: கணபதி ஆலயங்கள்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்

அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்-635 124, கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

+91- 94436 18811(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – விநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாகலூர்

மாவட்டம்: – கிருட்டிணகிரி(கிருஷ்ணகிரி)

மாநிலம்: – தமிழ்நாடு

சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பாதத்தை காட்டுகிறார். இந்த விநாயகரை வழிபட்டால் சிவசக்தியை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் பிற கோயில்களைப்போல் அல்லாமல் இரண்டு அடுக்குமாடியுடன் அமைந்திருப்பது சிறப்பு. கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார்,

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், சேண்பாக்கம்– 632008 , வேலூர் மாவட்டம்

+91-416 – 229 0182, 94434 19001 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – செல்வ விநாயகர்

தல விருட்சம்: – வன்னிமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: – சுயம்பாக்கம்

ஊர்: – சேண்பாக்கம்

மாவட்டம்: – வேலூர்

மாநிலம்: – தமிழ்நாடு

மராட்டிய அமைச்சரான துக்காஜி தனது தேரில் இவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் சக்கரத்தின் அச்சு முறியவே கீழே இறங்கிப் பார்த்தார். சக்கரத்தின் கீழிருந்து ரத்தம் கொப்புளித்தது. பயந்து போன துக்காஜியிடம் விநாயகரின் அசரீரி தோன்றி, “இவ்விடத்தில் ஏகாதச (11) வடிவில் நான் இருக்கிறேன். என்னை வெளிக்கொண்டு வா,” என்றது. அதன்படி துக்காஜி லிங்க வடிவில் இருந்த 11 விநாயகர்களையும் எடுத்து நிறுவனம் செய்தார். மூலவரான செல்வ விநாயகரின் முதுகின் வலது பக்கத்தில் தேர் சக்கரம் ஏறிய வடு இன்னமும் உள்ளது.

இங்கு விநாயகர் 11 சுயம்பு மூர்த்திகளாக அருள்பொழிகிறார் .