தஞ்சைப்பெரியகோயில்-நந்தி


நந்தி யிருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே யொழிந்தன
உந்தியி னுள்ளே யுதித்தெழுஞ் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனன்றே.

தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்


கண்டதொரு காட்சியென்ன அண்டபிண்டம்
……………கருவான ரவிமதியுஞ் சேர்ந்தமூலம்
ஒன்றான மூலமடா மவுனபீடம்
…………..ஓங்காரக் கம்பமடா நந்திவீடு
பண்பான வீடறிந்து சுழினைமேவி
…………..பார்மகனே போதமென்ற ஞானத்தீயை
குன்றான தீயதுதா னுந்தியுந்தி
………….குருவான செந்தீயடா சிகாரமாச்சே.