Monthly Archives: March 2012

சனிதோஷ பாதிப்பு குறைய

சனிதோஷ பாதிப்பு குறைய

சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கி தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர்.

இராவணனின் மகன் இந்திரஜித்து. இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி இராவணன் கட்டளை இட்டான். அவன் கட்டளைப்படி சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.

சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும்.

சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு கறுப்புத் துணி தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்நிதானமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

சனிபகவானுக்குரிய இலை வன்னி இலை. இந்த இலையால் நவக்கிரக மண்டபத்திலுள்ள சனி
பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். சனி தோறும் நீலோற்பவ மலரால் சனி பகவானை அர்ச்சித்து வர பொன், பொருள் சேரும். திருமணத் தடை விலகும்.

மாற்றுத்திறனாளிகள், அவலட்சணமாக
இருப்பவர்களுக்கு உதவி செய்தால், மிகுந்த நன்மை தருவார்.

அஷ்டமச்சனி பரிகாரம்:
நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெயையும் கலந்து, எட்டு முகம் வைத்த ஒரு இரும்பு விளக்கில் திரிபோட்டு சனீஸ்வரனுக்கு விளக்கேற்றி, அவரை வலம் வந்து வழிபட்டால் அஷ்டமச்சனி விலகிவிடும். நிம்மதி
பிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாகும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை தானம், அன்னதானம், குடை தானம், கைத்தடி தானம் என தான தர்மங்கள் செய்துவர சனிதோஷம் விலகி ஆயுள் வளரும். நோய் நொடிகள் தீரும்.
உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

அக்னீஸ்வரர் திருக்கொள்ளிக்

காடு

திருவாரூர்
எந்திர சனீஸ்வரர் ஏரிக்குப்பம் திருவண்ணாமலை
ஏகாம்பரேஸ்வரர் சவுகார்பேட்டை சென்னை
கைலாசநாதர் மணக்கால் திருச்சி
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி
காசி விஸ்வநாதர் இரும்பாடி சோழவந்தான் மதுரை
சனீஸ்வர பகவான் குச்சனூர் தேனி

சனீஸ்வரர்

கல்பட்டு

விழுப்புரம்

சனீஸ்வரன் மொரட்டாண்டி

விழுப்புரம்

தர்ப்பாரண்யேஸ்வரர் திருநள்ளாறு புதுச்சேரி
தாண்டேஸ்வரர் கொழுமம் கோயம்புத்தூர்
அக்னீஸ்வரர் நல்லாடை நாகப்பட்டினம்
கோழிக்குத்தி வான முட்டிப்பெருமாள் சோழன் பேட்டை நாகப்பட்டினம்
வாலீஸ்வரர் கோலியனூர் விழுப்புரம்
வேங்கட வாணன் பெருங்குளம், திருக்குளந்தை தூத்துக்குடி

 

சர்க்கரை நோய் நீங்க

சர்க்கரை நோய் நீங்க

நடுக்கம், பயம், வியர்வை, களைப்பு, கடுமையான பசி, தலையிடி, கண்பார்வை மங்கல், தலைச்சுற்று, நெஞ்சுப் படபடப்பு, தடுமாற்றம், கூடுதலான நித்திரைக் குணம், வயிற்று வலி, ஓங்காளம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இவ்வறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றவேண்டும் என்பதில்லை. ஒருசில அறிகுறிகள் மட்டும் தெரிந்தாலும் கவனம் தேவை. சர்க்கரை நோய் வந்துவிட்டது.

கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை கொண்ட ஒருவர், இனிப்பு அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்து விடும்.

பெயரில் தான் இனிப்பே தவிர சர்க்கரை நோய் பற்றிய உண்மைகளும் அனுபவங்களும் கசப்பானவையாகத்தான் உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி இந்தியர்களைச் சர்க்கரை நோய் அதிகம் தாக்குகிறது. உலக சுகாதார அமைப்பும் 2025 வாக்கில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 5 முதல் 5 1/2 கோடியாக இருக்கலாம் என்று கூறுகிறது. ஆகவே, இந்தியர்களாகிய நமக்கு, இந்நோய் பற்றிய விழிப்புணர்ச்சி அதிகமாகவே தேவைப்படுகிறது.

வகை 1: எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப் பசி, அதிகம் சாப்பிட்டாலும் எடை குறைதல், எப்போதும் களைப்பும் சோர்வும் தலைச்சுற்றல் சில நேரங்களில் நினைவு இழத்தல். இந்த வகை சர்க்கரை நோய் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்குவதால் மேலே உள்ள அறிகுறிகளில் ஏதேனும் 2 அல்லது 3 தங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் உடனே காலம் கடத்தாமல் மருத்துவாரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும். மருத்துவர் உடனே குழந்தைக்கு இன்சுலின் செலுத்துவார். இதைச் செய்யத் தவறினால் குழந்தை கோமா என்ற நிலைக்குத் தள்ளப்படலாம். அதன் பிறகு சிகிச்சை முறைகள் கடுமையாகலாம். ஆகவே, இன்சுலின் ஊசி ஒன்றுதான் டைப் 1 சர்க்கரை நோய்க்குத் தீர்வு.

வகை 2: இவ்வகை சர்க்கரை நோய்க்கு டைப் 1 அறிகுறிகளே மிதமாக இருக்கும். அறிகுறிகள் மிதமாக இருப்பதாலேயே இதனை அலட்சியமாக விட்டு விடக்கூடிய போக்கும் நம்மிடையே காணப்படுகிறது. மேலும் ஆறாத ரணங்கள், ஆறாத தோல் அந்தரங்க உறுப்புகளில் காளான் தொற்று, பாதங்களில் உணர்ச்சியற்ற தன்மை, எரிச்சல் உணர்ச்சி ஆகியனவும் டைப் 2 டையாபடீசின் அறிகுறிகளாகும். அதிக உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், பெற்றோர்க்கு சர்க்கரை நோய் இருத்தல் போன்ற காரணங்களும் இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடும்.

ஏறத்தாழ 80% மக்கள் இந்நோயினை ஆரம்ப நிலையில் அறிவதில்லை. வேறு ஏதாவது ஒரு நோய்க்குச் சிகிச்சை பெறும்போதோ அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் பொழுதோதான், சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்படுகிறது.

35 வயதைக் கடந்தவர்கள், வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம், விழித்திரை பாதிப்பு நோய் வருவதை தடுக்கலாம். இந்நோய் இதயம், கண்கள், கிட்னி போன்ற முக்கிய பகுதிகளைத் தாக்கி, அமைதியாக அழித்து விடும். கர்ப்பிணிகளுக்கு வரும் சர்க்கரை நோயை வெறும் அறிகுறிகளை வைத்துக்கண்டறிவது கடினம். சில சமயங்களில் அரிப்பாலோ, சிறுநீர் கழிக்கையில் வலியோ, எரிச்சலோ இருப்பதாலோ, இந்த வகையான சர்க்கரை நோய் என்று கண்டறியலாம். ஆகவேதான் கர்ப்பிணிகளுக்கு 3 மாதங்களுக்கொருமுறை குழந்தை பிறக்கும் வரை சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சர்க்கரை நோயுள்ள பெண்கள் திட்டமிட்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்திய பின்னரே கருவுறுதல் வேண்டும். இதனால் குறையுள்ள குழந்தை பிறப்பது தடுக்கப்படும். கர்ப்பிணிகள் தங்கள் சர்க்கரையின் அளவை, அடிக்கடி பரிசோதித்து, கட்டுக்குள் கொண்டுவராவிடில் 4 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய குழந்தைககள் பிறப்பதற்கும் அக்குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் சர்க்கரை நோய் ஏற்படவும் வழிவகுத்தவர்களாவோம்.
சர்க்கரை நோய் ஒரு குறைபாடே தவிர கிருமிகளால் ஏற்படும் ஒரு வியாதி அல்ல. ஒரு தடவை இரத்தத்தில் அதிக சர்க்கரை காணப்பட்டால் உணவுக் கட்டுப்பாடு, தேகப் பயிற்சி, மருந்து இவற்றால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். எப்போதும் போல் இயல்பான வாழ்க்கையை நடத்த முடியும். சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் வாழவும் முடியும்.

கைமருந்துகள்: இவை இந்நோயின் ஆரம்பகாலத்தில் நல்ல பலனைக்கொடுக்கும்.

நாவல் பழக் கொட்டையை காய வைத்து பொடி பண்ணி தினமும் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து பருகி வந்தால் விரைவில் குணமாகும். இந்நோயின் ஆரம்பநிலையில் இதை கையாண்டால் குணம் கிடைக்கும்.
மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.
வெற்றிலை – 4; வேப்பிலை – ஒரு கைப்பிடி; அருகம் புல் – ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை சர்க்கரை நோயால் ஆபத்தில்லை.

இத்துடன் திருவாரூர் மாவட்டம் கோயில்வெண்ணியில் உள்ள அருள்மிகு வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.