Monthly Archives: December 2011

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில்

அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருச்செம்பொன்பள்ளி), செம்பொன்னார்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம்

+91-99437 97974 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சுவர்ணபுரீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சுகந்த குந்தளாம்பிகை
தல விருட்சம் வன்னி, வில்வம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருச்செம்பொன்பள்ளி, இலக்குமிபுரி, கந்தபுரி, இந்திரபுரி
ஊர் செம்பொனார்கோவில்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர்

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன், தன் மகள் தாட்சாயிணியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறார். தனது அகந்தையால் தனது யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயிணி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது, ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும், தட்சன் நிந்தித்து விடுகிறார்.

தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார்.

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்(திருப்பறியலூர்), கீழப்பரசலூர்

அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்(திருப்பறியலூர்), கீழப்பரசலூர், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91-4364- 205555 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்
உற்சவர் சம்ஹாரமூர்த்தி
அம்மன் இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)
தல விருட்சம் பலா மரம்
தீர்த்தம் உத்திரவேதி
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பறியலூர்
ஊர் கீழப்பரசலூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர் திருஞானசம்பந்தர்

தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தைப் பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர்ஆனது.

சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான். தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன், தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

எனவே நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை. தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும் தட்சனையும் அழித்த தலம் ஆகும். இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக அற்புதக்காட்சியாகும். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது.