Category Archives: வேலூர்

ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர்

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர், வேலூர் மாவட்டம்.

+91 98947 45768, 98946 82111, + 416 222 3412, 222 1229

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜலகண்டேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்
அம்மன் அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் கங்காபாலாறு, தாமரை புஷ்கரணி
ஆகமம் சிவாகமம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வேலங்காடு
ஊர் வேலூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் இலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில், இலிங்கம் இருந்த பகுதி வேலமரக் காடானது. இலிங்கத்தைப் புற்று மூடிவிட்டது. பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், புற்றால் மூடப்பட்டுள்ள இலிங்கத்தைச் சுட்டிக்காட்டி கோயில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் கோயில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே சுவாமிக்கு ஜலகண்டேஸ்வரர்என்று பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை

அருள்மிகு தன்வந்திரி திருக்கோயில், வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் உதித்த மகாபுருஷர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும்.

தன்வந்திரி இந்து மதத்தில் வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். தன்வந்திரியை முதல் மருத்துவர் என்று நம்புகின்றார்கள் இந்துக்கள். விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த விஷ்ணு கோவில்களில் மட்டும் தனி சந்நிதியில் தன்வந்திரி காணப்படுகிறார்.