Category Archives: வேலூர்

வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர்

அருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம்.

+91 99769 99793, 98436 43840

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் அர்ச்சகரை அழைத்து வந்து சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் வளவநாதீஸ்வரர்
உற்சவர் சந்திரசேகரர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் சிவதீர்த்தம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சிவபாதநல்லூர்
ஊர் வளையாத்தூர்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த மன்னர் ஒருவர், தீவிர சிவபக்தராக இருந்தார். மக்கள் சிறப்பாக வாழவும், விவசாய நிலம் செழித்து வளரவும் அருள்புரியும் சிவனுக்கு, தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஆனால், அவருக்கு எங்கு, எப்படி கோயில் அமைப்பதெனத் தெரியவில்லை. ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய சிவன், இந்த இடத்தை குறிப்பால் உணர்த்தினர். அதன்படி, மன்னர் இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினார். இங்கு அருளும் சிவன் மக்களுக்கு வேண்டும் வளத்தை தந்தருளியதால் வளவநாதீஸ்வரர்என்றே பெயர் பெற்றார். மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். பல்லவர், சோழர், சம்புவராயர், நாயக்கர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களால் திருப்பணி செய்யப்பட்ட புராதனமான கோயில் இது.

நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி

அருள்மிகு நரசிம்மேஸ்வரர் சமேத மரகதவல்லி, கோயில், தியாமுகச்சேரி @ ஐயம்பேட்டைசேரி, வேலூர் மாவட்டம்.

சைவமும் வைணவமும் இணைந்த ஓர் அற்புதக் கலாசாரம் ஒரே திருக்கோயிலில் காணக் கிடைப்பது அபூர்வம். அப்படிப்பட்ட ஒரு திருக் கோயில் காவேரிப்பாக்கத்துக்கு அருகே அமைந்துள்ளது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அடுத்து வருவது காவேரிப்பாக்கம். சென்னையில் இருந்து காவேரிப்பாக்கத்துக்கு சுமார் 100 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்துக்கு வலப் பக்கம் காவல்நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலை சோளிங்கர் வரை நீளும். இடப் பக்கம் பிரமாண்ட ஏரியுடன் துவங்கும் இந்தச் சாலையில் வாழைத்தோப்புகள், நெல் வயல்கள் என சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால் வருகிறது ஐயம்பேட்டைசேரி எனும் கிராமம். இதை தியாமுகச்சேரி என்றும் அழைக்கிறார்கள். திசைமுகன்சேரி என்பது தியாமுகச்சேரி என ஆகி இருக்கிறது.