Category Archives: வேலூர்

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், இரத்தினகிரி, வேலூர் மாவட்டம்.

+91- 4172 – 266 350, 266 330, 94436 25887

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பாலமுருகன்
உற்சவர் சண்முகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இரத்தினகிரி
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது முதுமொழி. இவ்வாறு முற்காலத்தில் இங்குள்ள குன்றில் முருகன் கோயில் இருந்தது. சரியான வசதி இல்லாததால், சுவாமிக்கு முறையான பூஜை எதுவும் நடக்கவில்லை.

ஒருசமயம் இக்கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், அர்ச்சகரிடம் சுவாமிக்கு தீபாராதனை காட்டும்படி கேட்டார். அர்ச்சகர் கற்பூரம் இல்லை என்றிருக்கிறார். பின்பு, பத்தி ஏற்றி வைக்கும்படி வேண்டினார் பக்தர். பத்தியும் இல்லை என்றார் அர்ச்சகர். பரிதாப நிலையில் இருக்கும் கோயிலை நினைத்து வருத்திய பக்தர், தீபாராதனைகூட செய்யப்படாத முருகனுக்கு கோயில் தேவைதானா? என்ற சிந்தித்தார். உடன் அவரது மனதில் முருகன் பிரசன்னமாக தோன்றவே, மயக்கமானார் பக்தர். இதைக்கண்ட அர்ச்சகர் ஆட்களை அழைத்து வர, மலையடிவாரத்திற்கு சென்றார். இதனிடையே எழுந்த பக்தர், மணலில் இந்த முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். கோயில் திருப்பணி தவிர வேறு சிந்தனை எனக்கில்லைஎன மணலில் எழுதி வைத்துவிட்டு அமர்ந்து விட்டார். அதன்பின்பு அவர் யாரிடமும் பேசவும் இல்லை. பிற்காலத்தில் இங்கு குன்றிலேயே முருகனுக்கு தனிக்கோயில் கட்டப்பட்டது.

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம்

அருள்மிகு சலநாதீஸ்வரர் உடனுறை கிரிராஜ கன்னிகாம்பாள் திருக்கோயில், தக்கோலம், வேலூர் மாவட்டம்.

+91- 4177-246 427 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சலநாதீஸ்வரர்
அம்மன் கிரிராஜ கன்னிகாம்பாள்
தல விருட்சம் தக்கோலம்
தீர்த்தம் பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருவூறல்
ஊர் தக்கோலம்
மாவட்டம் வேலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

தேவகுருவாகிய வியாழனின் தம்பி உததி முனிவர். இவருக்கும் மனைவி மமதைக்கும் மகனாக தீர்க்கதர் தோன்றினார். ஒரு நாள் தீர்க்கதர் தன் ஆசிரமத்தின் அருகே தெய்வப்பசுவாகிய காமதேனு வரக்கண்டார். தாம் நடத்தும் வேள்விக்கு வந்தவர்களை உபசரிப்பதற்காக காமதேனுவை தம்முடன் இருக்குமாறு அவர் வேண்டினார். இந்திரன் கூறாமல் தங்க மாட்டேன் என காமதேனு மறுத்தது. முனிவர் அதை கட்டிப்போட முயன்றார். காமதேனு அவரை இழிந்த தொழில்களைச் செய்யும் நிலை ஏற்படும் என்று சபித்தது. முனிவரும் காமதேனுவை சாதாரணப்பசுவாக போகும்படி சபித்தார். உததி முனிவர் தன் மகன் இழிந்த செயல்கள் செய்வது கண்டு வருந்தினார்.

நாரதரின் அறிவுரைப்படி தன் மகனுக்காக இத்தலம் வந்து சிவனை வழிபட்டார். இறைவன் வெளிப்பட்டு,”இக்குறை தீர நந்தியை வழிபட்டு, அவர் வாயிலிருந்து தெய்வகங்கையை வரவழைத்து, அதன் மூலம் தமக்கு அபிஷேகம் செய்தால் பாவம் நீங்கும்எனக் கூறி மறைந்தார்.