Category Archives: மதுரை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************************

+91-452 – 2311 475 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்,பேச்சியம்மன்

அம்மன்: – மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்: – வேம்பு, அரசு

தீர்த்தம்: – தெப்பக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மாமண்டூர்

ஊர்: – வண்டியூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி, மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை (தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில்) வைத்து பிரதிட்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்தெப்பம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது.இங்கு அம்மன் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.

அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்மதுரை-625 001.
******************************************************************************************

+91 98651 51099 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர்

தல விருட்சம்: – மாமரம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மதுரை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் மதுரை மீனாட்சி கோயிலுக்குத் தெற்கே மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விசுவகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர்.

ஒரு முறை இந்த கோயில் பூசாரி இரவு பூசைக்குப் பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூசாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூசாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூசாரி அதே இடத்தில் இறந்தார்.

பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ரஎன்றால் வடமொழியில் மாமரம்என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேசுவரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படி காமாட்சி உடனுறை ஏகாம்பரேசுவரர் சன்னதியாக மாறியது.

இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் திருமாலைப் படைக்கிறார். திருமாலும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனைப் படைக்கிறார்.