Category Archives: மதுரை

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை – 625 001, மதுரை மாவட்டம்.

+91- 98940 63660 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கூடலழகர்
உற்சவர் வியூகசுந்தரராஜர்
தாயார் மதுரவல்லி (வகுளவல்லி, வர குணவல்லி, மரகதவல்லி)
தல விருட்சம் கதலி
தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கூடல்
ஊர் மதுரை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார(மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து, தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டு விட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள், “யுகம் கண்ட பெருமாள்எனப்படுகிறார்.

வெற்றி தரும் பெருமாள் : இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன்என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும்முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்

அருள் மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர் கோவில்– 625 301, மதுரை மாவட்டம்.

+91 – 452-247 0228, 247 0229 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பரமஸ்வாமி
உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள்( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் ஜோதி விருட்சம், சந்தனமரம்
தீர்த்தம் நூபுர கங்கை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருமாலிருஞ்சோலை
ஊர் அழகர்கோவில்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் விருசுபகிரி(கோயில் இருக்கும் அழகர் மலை) என்னும் இம்மலையில் தபசுசெய்தார். இம்மலை 7 மலைகளை கொண்டது.

எமதர்மராஜனின் தபசை மெச்சிப் பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக எமதர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் உன்னை ஒரு மு‌றையாகிலும் பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம பூஜையை எமதர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு வேண்டிய, எமதர்ம ராஜன் விருப்பத்தின் பேரில் விஸ்வகர்மாவினால் சோமசந்த விமானம்(வட்ட வடிவ) உள்ள ‌கோயில் கட்டப்பட்டது.