Category Archives: மதுரை

கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி), மதுரை மாவட்டம்.

+91- 4552 – 243 235, 243 597, 94425 – 24323

காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களில் அதிகாலையிலேயும் நடை திறந்திருக்கும்.

மூலவர் கைலாசநாதர்
உற்சவர் நடராஜர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் நெய்கொட்டா மரம்
தீர்த்தம் பொற்றாமரைக்குளம்
ஆகமம் 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் திடியன் மலை
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

இராவணனின் கொடூர ஆட்சிக்கு முடிவு கட்டிய இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு அசுவமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, அவரது பட்டத்துக் குதிரை செல்லும் வழியில் எங்‌கெல்லாம் ஒய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம் ஒர் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்டை ‌செய்யப்பட்டு வணங்கப்பட்டது. அவ்வாறு ஒர் நாள் அவரது பட்டத்துக் குதிரை தற்போது ‌கோயில் அமைந்திருக்கும் பகுதி்க்கு அருகே உள்ள மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள ஒர் பொற்றாமரைக் குளத்தின் கரையில் அமர்ந்து ‌ஓய்வெடுத்தது. ஆகவே அவ்விடத்தில் காசிலிங்கம் வைத்து பிரதிஷ்ட‌ை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் காசிலிங்கம் பிரதி்ஷ்டை செய்யப்பட்ட இடத்தில் தினியே கோயிலைக்கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம்

அருள்மிகு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில், பழங்காநத்தம் மதுரை, மதுரை மாவட்டம்.

+91 452 237 1909, 97895 98380, 90438 46451

காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காசி விஸ்வநாதர்
அம்மன் விசாலாட்சி
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் பழங்காநத்தம்
மாவட்டம் மதுரை
மாநிலம் தமிழ்நாடு

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருமணம் சிறப்பாக நடந்தது. விஷ்ணு தாரை வார்த்து கொடுக்க, பிரம்மா சிறப்பாக நடத்தி வைத்தார். இந்த தெய்வீகத் திருமணத்தை காண வந்தவர்களில் பதஞ்சலி மகரிஷியும், வியாக்ரபாதரும் அடங்குவர். இவர்கள் இருவரும் தினமும் சிதம்பரம் பொன்னம்பலத்தில் சிவனின் நடனத்தை பார்த்த பின் தான் உணவருந்துவதைக் கடமையாக கொண்டிருந்தனர். இப்போது மதுரையில் இருப்பதால், அவர்களது விருப்பப்படி வெள்ளியம்பலத்தை தோற்றுவித்து அதில் நடனமாடினார் சிவன். இந்த திருநடனத்தை தரிசித்தபின்தான் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் சாப்பிட்டனர். பின்னர் பதஞ்சலி மகரிஷி ஒரு வில்வமரத்தின் கீழ் யோகத்தில் அமர்ந்தார்.