Category Archives: மதுரை

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர்

அருள்மிகு நாகம்மாள் திருக்கோயில், கெங்கமுத்தூர், பாலமேடு, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த நாகம்மனை தரிசிக்க செல்லலாம்.

மூலவர்: – நாகம்மாள்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – பாலமேடு, கெங்கமுத்தூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில் அம்மன், பசுமையான தென்னஞ்சோலைக் குள்ளே புற்றாக வளர்ந்து காட்சி அளித்து வந்தாள்.

நாளடைவில் தாய் கருமாரி, வேம்பு மரத்தடியில் சக்தியாக உருமாறி நின்றாள் இந்த சக்திசொரூபம் தான் ஒருமுறை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு நாக அம்மனாக மாறினாள்.

வெள்ளத்தில் வலம் வந்த நாகம்மாள், இந்த இடத்தைத்தான் தனக்குரிய இடமாக தேர்ந்தெடுத்தாள். அத்துடன் மக்களுக்கு அருள் வழங்கும் வகையில் கருமாரியையும், பெரிய நாகம்மானையும், ராக்காயியையும் தன்னுடன் இணைத்து ஒன்று சேர்ந்து ஒங்கார சொரூபமான நாகம்மாள்என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள்.

பார்வதியின் 108 அவதாரத்தில் ஒன்றுதான் இந்த நாகம்மாள் அவதாரம். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான், அன்னை பராசக்தி, நாகம்மாள் அவதாரம் எடுத்துள்ளாள் என்கிறது புராணம்.

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை

அருள்மிகு முத்துநாயகி அம்மன் திருக்கோயில், பரவை, மதுரை.
************************************************************************

+91 99949 12047 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முத்துநாயகியம்மன்

தல விருட்சம்: – வேப்பமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்: – பரவை

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன், பரவை பகுதி முழுவதும் புஞ்சை நிலங்களாக இருந்தது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்தனர். ஒரு சமயம் விவசாயிகள் உழுது கொண்டிருந்த போது, ஒரு இடத்தில் ஏர் ஆணி தட்டியது. தொடர்ந்து முயற்சிக்க ஏதோ ஒரு உலோகச் சத்தம் கேட்டது. விவசாயிகள் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தனர். பூமியில் பதிந்த ஏரை தூக்கினர்., பூமிக்குள் முத்துமுத்தாக சிகப்பு நிறத்தில் ஏதோ கொப்பளித்தது. இந்த அற்புதத்தை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியாகி, மற்ற விவசாயிகளை அழைத்தார்கள். அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அக்கட்சியைக் கண்டு வியந்தனர். அனைவரும் இந்த இடத்தில் அதிசய சக்தி இருப்பதாக கருதினர். மேலும், அவ்விடத்தில் தோண்டிப் பார்த்தபோது, உள்ளிருந்து ஒரு சிலை வெளிப் பட்டது. ஆதிபராசக்தியின் திருவுருவமான அழகான அம்மன் சிலையைக் கண்டு மக்கள் பக்தி பரவசம் கொண்டனர். பக்திப்பெருக்குடன் தீபாராதனை செய்து வழிபட்டனர். இவளுக்கு முத்து நாயகியம்மன் என்று பெயர் சூட்டப்பட்டது . அங்கு வசித்த பட்டையக்காரர் என்பவர் கனவில் அம்மன் தோன்றி,”நீங்கள் வசிக்க ஒரு குடில் இருப்பது போல், எனக்கும் ஒரு குடில் வேண்டாமா?” எனக் கேட்டாள். இந்த விசயத்தை கிராம கூட்டத்தில் அவர் கூற, பொதுமக்கள் கோயில் கட்டினர்.