Category Archives: திருச்சி

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், உறையூர்– 620 003. திருச்சி மாவட்டம்.
*****************************************************************
+91- 99767 17317(மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு முன்பு அவர்களுக்குள் நாட்டை பிரித்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் மூவருக்கும் பொதுவான ஒருவரை வைத்து எல்லையைப் பிரித்துக் கொள்ள விரும்பினர். எனவே, அம்பிகையை வேண்டித் தவமிருந்தனர்.

அம்பிகை, அவர்களுக்கு காட்சி தந்தார். மூவேந்தர்களும் தாங்கள் ஆட்சி செய்ய வேண்டிய பகுதியை நிர்ணயம் செய்து தரும்படி வேண்டினர். அம்பிகை நாட்டை மூன்றாகப் பங்கிட்டு எல்லை வகுத்து தனித்தனியே பிரித்துக் கொடுத்தாள். அந்நாடுகள் அவர்களது பெயரிலேயே அழைக்கப்பட்டது. அப்போது மூவேந்தர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் அமர்ந்தருளும்படி அம்பிகையிடம் வேண்டிக்கொண்டனர்.

அம்பிகையும் அவ்வாறே அருள் செய்தார். அப்போது சோழ மன்னன், தனக்கு பிரித்துக் கொடுத்திருக்கும் நாடு எப்போதும் செழிப்பாக இருக்க அருள வேண்டும் என வேண்டினான்.

அவனது கோரிக்கையை ஏற்ற அம்பிகை, காவிரி நதியால் அவனது நாடு எப்போதும் செழிப்புற்றிருக்கும் படி அருளினாள். சோழ மன்னனுக்கு அருள் செய்த அம்பிகை, இத்தலத்தில் செல்லாண்டியம்மனாகஅருளுகிறாள்.

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர்

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், துறையூர் திருச்சி மாவட்டம்.

காலை7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – அங்காளபரமேசுவரி

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – துறையூர்

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

வல்லாள ராஜா என்பவர் துறையூர் பகுதியை ஆண்டு வந்தார். அவர் பெரிய கருமி. எப்படிப்பட்ட கருமி தெரியுமா? காக்கா, குருவிகள் வயலில் உள்ள நெல் மற்றும் தானியங்களை தின்றுவிடுமே என்பதற்காக, வயலுக்கு மேல் வலை கட்டி அவற்றை வரவிடாமல் தடுக்கும் கருமி. இப்படிப்பட்ட கருமிக்கு குழந்தை பிறக்குமா? ராச்சி பரிபாலனமே கையில் இருந்தும், எதிர்காலத்தில் அதை அனுபவிக்கப் பிள்ளை இல்லை.

அரசனுக்கு அம்பிகையின் அம்சமான பேச்சியம்மனின் நினைவு வந்தது. “அம்மா! எனக்கு குழந்தையில்லை. நாடாளக் குழந்தை வேண்டும்,” என உருக்கத்துடன் வேண்டினான். அந்தக் கஞ்சனையும் நல்வழிப்படுத்த எண்ணிய பேச்சி குழந்தை வரம் தந்தாள். ராணி கருவுற்றாள்.