Category Archives: திருச்சி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், மாகாளிக்குடி, சமயபுரம், திருச்சி மாவட்டம்.

+91-431 267 0860, 267 0460, 98424 02999 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி
உற்சவர் அழகம்மை
தல விருட்சம் மகிழ மரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் மாகாளிக்குடி
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்தன். காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் உச்சினி மாகாளி, உச்சிமாகாளிஎன்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

ஒரு சமயம் காட்டில் ஆட்சி செய்ய, காவிரிக்கரையிலுள்ள மகாகாளிகுடி காட்டுக்கு, தான் வழிபட்ட காளி சிலையுடன் வந்தார். இங்கே தங்கிப் பூசை செய்து கொண்டிருந்தார். அவர் நாடு திரும்பும்போது, தான் வழிபட்ட சிலையை எடுக்க முயன்றார். முடியவில்லை. அம்பாளைத் தன்னுடன் வரும்படி எவ்வளவோ கெஞ்சினார். அப்போது அவர் முன் தோன்றிய காளி, இந்த இடத்திலும் தனது சக்தி தங்கும் என்று கூறி விட்டாள். அதைத் தொடர்ந்து அம்பாளுக்கு கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார்.

ஒருநாள் காளி, “இங்கிருந்து 2 கல் தொலைவில் ஒரு சிவாலயம் உள்ளது. அந்த சிவன் கோயிலில் உள்ள முருங்கை மரத்தில் ஒரு வேதாளம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை நீ கீழே இறக்கினால் அது உனக்கு 32 கதைகளைச் சொல்லும். அதைவென்று அடிமைப்படுத்தினால், உனக்கு எல்லா உதவிகளையும் செய்யும். அதன்படி நீ நடந்தால் உனக்கு உன்னத பதவி கிடைக்கும்எனக் கூறி மறைந்தாள்.

வேதாளமும் விக்கிரமாதித்தனும்கதை நடந்த தலம் இதுதான் என்கின்றனர்.

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர்

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், தென்னூர், அண்ணாமலை புரம், திருச்சி.
***********************************************************************************************

காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் பூங்காளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தென்னூர்
மாவட்டம் திருச்சி
மாநிலம் தமிழ்நாடு

அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமாகத் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள் புரிகின்றாள்.

கோபுர வாயிலைத் தாண்டியதும், மகா மண்டபம் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கின்றார். கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு திகழ்கின்றாள். இவளை தரிசிக்கும்போதே நம்மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.