Category Archives: திருச்சி

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், S.கண்ணனூர்

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், S.கண்ணனூர், திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆதிமாரியம்மன்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்பு

ஊர்: – S.கண்ணனூர்

மாவட்டம்: _ திருச்சி

மாநிலம்: _ தமிழ்நாடு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல் செய்து வந்த ஒருவர் இந்த பகுதியைக் கடக்கும் போது, குழந்தை ஒன்று, “நான் இங்குதான் இருக்கிறேன்எனக் கூறும் குரல் மட்டும் கேட்டது. அவர் ஊரிலுள்ள மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு குரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது அந்த பகுதியில் புற்று ஒன்று தெரிந்தது. பராசக்திதான் குழந்தை வடிவில் வந்து தான் அங்கு குடி கொண்டிருப்பதை தெரிவித்துள்ளாள் என்பதை அறிந்த மக்கள் அங்கே அம்மனுக்கு திறந்த வெளியில் கோயில் அமைத்து வழிபடத் துவங்கினர். ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை கொண்டாடி வந்தனர்.

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி-620 001.

+91-431- 270 4621, 270 0971, 271 0484

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – உச்சி பிள்ளையார்

தீர்த்தம்: – காவிரி

ஆகமம் : – சிவாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திரிசிராப்பள்ளி

ஊர்: – திருச்சி

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

ராமர் ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீடணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். அயோத்தியில் ராமர் முடிசூட்டு விழா முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீடணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டுச் சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.