Category Archives: திண்டுக்கல்

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை

அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில், ஐவர் மலை, பழநி, திண்டுக்கல் மாவட்டம்.

+91- 4545 – 260417 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திரவுபதி(பாஞ்சாலி)
தல விருட்சம் வன்னி, வேம்பு
தீர்த்தம் சூரிய புஷ்கரிணி, சந்திரபுஷ்கரிணி
முருகனுக்கு தனியாக பால்சுனை
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்பு
ஊர் ஐவர்மலை
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

பஞ்சபாண்டவர்கள், தங்களின் வன வாசத்தின்போது பாஞ்சாலியுடன் இந்த ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுகிறார்கள். இதனால்தான் இந்த மலை ஐவர் மலை என அழைக்கப்படுகிறது. “ஐவர் மலை இல்லை “ஆயிர” மலை என்பது தான் ஐவர் மலையில்உள்ள கல்வெட்டு கூறும் தகவல்” என்கிறார் ஒரு நண்பர்.

மேலும் பழனி மலை முருகன் சிலையை நவ பாஷாணத்தால் உருவாக்கியவரான போகர் இங்கிருந்து தான் முருகன் சிலையை செய்துள்ளார். அதாவது போகருக்கு பிரம்மகத்தி தோடம் பிடித்துக்கொண்டது. இந்த தோசம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேசுவரி அம்மன் தோன்றி, இந்த தோசம் போக வேண்டுமானால் நவபாஷாணத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து, அந்த முருகன் சிலையைப் பழனியில் வைத்து வழிபடும்படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பைத் தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி – 624 705, திண்டுக்கல் மாவட்டம்.

*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராஜகாளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தெத்துப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்தார். அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார்.

பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.