Category Archives: இராமநாதபுரம்

மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை

அருள்மிகு மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி திருக்கோயில், உத்தரகோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4567 – 256 333, 256 214

காலை 6 மணி முதல்11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மங்களநாதர்
அம்மன் மங்களேஸ்வரி
தல விருட்சம் இலந்தை
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் உத்தரகோசமங்கை
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுறை மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது. இராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனைத் தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து,”நான் மண்டோதரிக்கு காட்சிதரச் செல்கிறேன். திரும்பி வரும்வரை இதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்எனக் கூறிச்சென்றார்.

சிவன் மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது இராவணன் அந்த குழந்தை சிவன் என்பதைப் புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி இராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன.

சிவன் முனிவர்களிடம் விட்டுச் சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர். அது அக்னி தீர்த்தம்எனப் பெயர்பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலைக் காப்பாற்றினார். பிறகு இராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார்.

ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221 223, 221 241

காலை 6 மணி முதல் 11 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஜடாமகுட தீர்த்த ஈஸ்வரர்
தீர்த்தம் ஜடா மகுட தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வேத வியாசரின் மகனாகிய கிளி முகம் கொண்ட சுகர் பல்வேறு யாகங்களை செய்தார். ஆனால், தவயோக ஞானசித்திகளை அடைய முடியவில்லை. ராஜமுனி ஜனகரின் அறிவுறைப்படி சுகர் ஜடாமகுட தீர்த்தத்தில் நீராடி, தியானலிங்க மூர்த்திகளாக விளங்கிவரும் ஞானேஸ்வரர், அஞ்ஞானேஸ்வரரை வழிபட்டு ஞானியாக திகழ்ந்தார்.

கொடுங்கோபியாகிய துர்வாச முனிவரும், சாந்தசீலராகிய பிருகு முனிவரும் வெவ்வேறு காலங்களில் புனித நீராடி அரிதான யோகசக்திகளை பெற்ற சிறப்புடையது இந்த ஜடாமகுட தீர்த்தம்.