Category Archives: இராமநாதபுரம்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம்

அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91- 4567- 222 155, 224 140, +91- 94432 35170

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஐயப்பன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராமநாதபுரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

சபரிமலையைப் போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளுகிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும்.

சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி இறைவன் ஒருவனேஎன்ற தத்துவத்தையும், “மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்குஎன்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, “இறைவனான இவரை வணங்குஎனக் காட்டுகிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம்

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம்.

இக்கோயிலில் இரும்பு கம்பிக்கதவு போடப்பட்டிருப்பதால் வெளியில் இருந்தே சுவாமியை தரிசிக்கலாம்.

மூலவர் சுக்ரீவர்
தீர்த்தம் சுக்ரீவர் தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் இராமேஸ்வரம்
மாவட்டம் இராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவனுக்காக இராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். சுக்ரீவன், இராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க இவ்விடத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். சுக்ரீவன் வழிபட்ட தலத்தில் பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. சுக்ரீவன் சன்னதியுடன் மட்டும் அமைந்த, மிகச்சிறிய கோயில் இது. கோயிலுக்கு வெளியில் சுக்ரீவர் உண்டாக்கிய தீர்த்தமும், எதிரே வங்காள விரிகுடா கடலும் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலம்.