Category Archives: இராமநாதபுரம்

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்

அருள்மிகு சுக்ரீவர் திருக்கோயில், ராமேஸ்வரம்– 623 526, ராமநாதபுரம் மாவட்டம்

மூலவர் சுக்ரீவர்
தீர்த்தம் சுக்ரீவர் தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் ராமேஸ்வரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

வானரனாகிய வாலி, தனது சகோதரன் சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததோடு, அவனை விரட்டியடித்தான். சுக்ரீவன், ராமர் சீதையை மீட்பதற்கு உதவி செய்தான். பின்பு சுக்ரீவனுக்காக ராமர், வாலியை மறைந்திருந்து கொன்றார். இவ்வாறு வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் பிடித்தது.

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம்

அருள்மிகு இராமர் பாதம், இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91-4573-221223; 91-4573-221255 (மாற்றங்களுக்குட்பட்டவை)

ராமருக்கே தோஷம் நீக்கிய தலம்

ஸ்ரீராம தீர்த்தம், ராமேஸ்வரம் திருத்தலத்தில், ராமநாதர் கோயிலுக்கு வெளியே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு ராமபிரான், நாகர் சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்கிறார்கள். ராவணனிடமிருந்து சீதையை மீட்பதற்கு வழி கிடைக்க, திருப்புல்லாணிக்கு அருகிலிருக்கும் கடலில் நவபாஷாணக் கல்லில் நவகிரகங்கள் நிறுவி வழிபட்டார் ராமர். அத்துடன் திருப்புல்லாணி தலத்தில் தர்ப்பையில் அமர்ந்து கடலரசனிடம், இலங்கைக்குச் செல்லப் பாலம் அமைக்க வழி கேட்டார். பிறகு, இலங்கைக்கு அனுமன் மற்றும் வானரப் படைகள் உதவியுடன் பாலம் அமைத்துச் சென்று இராவணனோடு போரிட்டு சீதையை மீட்டார். இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரை (அக்னி தீர்த்தம்) அருகில் சிவலிங்கம் நிறுவி பூஜித்து, தோஷ நிவர்த்தி பெற்றார். இராமர் நிறுவிய இலிங்கம்தான் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இராமநாதர்.