Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம்.
*****************************************************************************

+91-431 – 267 0460 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தல விருட்சம்: – வேம்பு

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – கண்ணபுரம்

ஊர்: – சமயபுரம்

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

இசுலாமியர்களின் படையெடுப்பின்போது சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் சிலையை வீரர்கள் தூக்கி சென்றுவிட்டனர். சமயபுரத்திலிருந்து செல்லும்போது ஒரு கால்வாய் குறுக்கிட்டது. அம்பாளை கரையில் வைத்துவிட்டு கால்வாய்க்குள் இறங்கி வீரர்கள் கை,கால் கழுவினர். திரும்பிவந்து பார்த்தபோது அங்கு சிலை இல்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்து சோர்ந்து சென்றுவிட்டனர்.

இதன்பிறகு அப்பகுதிக்கு விளையாடச் சென்ற குழந்தைகள் அந்த சிலையை கண்டனர். சிலைக்குப் பூசை செய்து விளையாடினர். இந்த தகவல் ஊர்மக்களுக்கு தெரியவந்தது. அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதற்காக முயன்றபோது ஒரு பெண்ணுக்கு அருள்வந்து சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கூறினார்.

மக்கள் பூ கட்டிப் பார்த்தனர். அதிலும் சமயபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றே தெரிந்தது. எனவே ஒரு யானையை வரவழைத்து அந்த யானை எங்கு போய் நிற்கிறதோ அங்கு கொண்டு செல்வோம் என முடிவு செய்யப்பட்டது. யானையும் சிறிது தூரம் நடந்து சென்று ஒரு இடத்தில் படுத்துவிட்டது. அந்த இடத்தல் சிலையை வைத்துப் பூசை செய்தனர். இவளே ஆதிமாரியம்மன் எனப்பட்டாள். சமயபுரத்தில் இருக்கும் அம்மன் இவளது மகளாகக் கருதப்படுகிறாள்.

இப்போதும் திருவிழாக் காலத்தில் சமயபுரம் மாரியம்மன், சமயபுரத்திலிருந்து பல்லக்கில் இங்கு வந்து தன் தாயைக் கண்டு செல்கிறாள்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் – 613 501 தஞ்சாவூர் மாவட்டம்.
*************************************************************************************************

+91- 4362- 267740 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5 – இரவு 9 மணி. ஆவணி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 3 – இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்(முத்துமாரி), துர்க்கை

தல விருட்சம்: – வேம்புமரம்

தீர்த்தம்: – வெல்லக் குளம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – புன்னைவனம்

ஊர்: – புன்னைநல்லூர்

மாவட்டம்: – தஞ்சாவூர்

மாநிலம்: – தமிழ்நாடு

கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டு வந்தான்.

தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து வணங்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.