Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை-642 126, கோயம்புத்தூர் மாவட்டம்.
*********************************************************************************************************

+91-4252- 224 755 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – மாரியம்மன்

தீர்த்தம்: – கிணற்றுநீர்

ஆகமம்/பூஜை: – சைவாகமம்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – உடும்புமலை, கரகிரி

ஊர்: – உடுமலைப்பேட்டை

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

பல்லாண்டுகளுக்கு முன்பு, பக்தர் ஒருவர் தாம் எங்கே செல்கிறோம் என்ற நினைவே இல்லாமல், தானாகவே வனப்பகுதிக்குள் சென்றார். நீண்ட தூரம் சென்ற அவர் ஓரிடத்தில் நினைவு திரும்பி நின்றபோது, அங்கே சுயம்பு வடிவில் அம்மன் இருந்ததைக் கண்டார்.

ஊருக்குத் திரும்பிய அவர் வனத்தில் அம்மனைக் கண்டதை மக்களிடம் கூறினார். அதன்பின், மக்கள் ஒன்று கூடி அம்மன் இருந்ததை வனத்தைச் சீரமைத்து கோயில் எழுப்பினர்.

பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அட்டநாக தெய்வங்கள் உள்ளன.

பெயர்க்காரணம்:

அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரிஎன்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலைஎன்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று மருவியது.

கோயில் மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. தல விநாயகரின் திருநாமம் சக்தி விநாயகர்.

இத்தல மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் அம்மனாக அருள்பாலிக்கிறார்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், வண்டியூர்

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், வண்டியூர் – 625 009, மதுரை மாவட்டம்.
***********************************************************************************************************

+91-452 – 2311 475 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – மாரியம்மன்,பேச்சியம்மன்

அம்மன்: – மாரியம்மன், துர்க்கை

தல விருட்சம்: – வேம்பு, அரசு

தீர்த்தம்: – தெப்பக்குளம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மாமண்டூர்

ஊர்: – வண்டியூர்

மாவட்டம்: – மதுரை

மாநிலம்: – தமிழ்நாடு

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரினை மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி புரிந்து வந்தார். அப்போது மதுரையின் கிழக்கே, தற்போது கோயில் வீற்றிருக்கும் பகுதி, மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அக்காட்டினை குறும்பர் எனும் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியையே அழித்து வந்தனர்.

நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு கூடுதலாகவே, ஓர் நாள் இப்பகுதிக்கு வந்த மன்னர் அவர்களின் கொட்டத்தினை அடக்கி விரட்டியடித்தார். அவர்களை விரட்டியபின் தனது வெற்றியினை ஆண்டவனுக்கு சமர்ப்பித்து வணங்கிட, அருகே வைகையில் கிடைத்த அம்பாளை (தெற்கு கரையில் தற்போது கோயில் வீற்றுள்ள பகுதியில்) வைத்து பிரதிட்டை செய்து வழிபட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இத்தெப்பம் தோண்டும்போது கிடைத்த மிகப்பெரிய முக்குறுணி விநாயகர் சிலை ஒன்று மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாட்டிற்காகவும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தலம் அம்மை நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையது.இங்கு அம்மன் பிரதானம் என்பதால், வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது.