Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்

அருள்மிகு கல்யாண சீனிவாசர் திருக்கோயில், சன்னியாசி கிராமம்திருநெல்வேலி மாவட்டம் .

+91- 462 – 233 4624 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கல்யாண சீனிவாசர்
உற்சவர்
தாயார் அலமேலு தாயார்
தல விருட்சம்
தீர்த்தம் கோபால, சீனிவாச தீர்த்தம்
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் வித்யகோபாலபுரம்
ஊர் சன்னியாசி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

பல ஆண்டுகளுக்கு முன்பு அல்லல்படும் மனித இனத்தின் மீது கருணை கொண்ட நாராயணன், சீனிவாசன் என்ற திருநாமம் கொண்டு மனித வடிவில் பூவுலகிற்கு வந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் தங்கினார். தாமிரபரணியில் குடிகொண்ட அவரை அறிந்து கொண்ட முனிவர்கள், மகரிஷிகள், சித்தர்கள், மகாபுருஷர்கள் என அனைவரும் அவரைத் துதித்து வணங்கி வந்தனர். அவர்களில், சன்னியாசி என்று ஒருவர் இருந்தார். அவருக்கு, சுவாமியின் மனிதரூப காலம் முடிந்து விட்டால், மனித குலம் நற்பயன்கள் பெறமுடியாத சூழல் வந்து விடுமோ என்ற பயம் எற்பட்டது. எனவே, நாராயணனை நோக்கித் தவம் புரிந்தார். அவரது வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாராயணர், அருட்காட்சி தந்தார். அவ்விடத்திலேயே கோயில் கொண்டு மக்களைக் காப்பதாகக் கூறி அருளினார். இவ்வாறு, சன்னியாசியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நாராயணர் இத்தலத்தில் வீற்றிருந்து கல்யாண சீனிவாசர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இந்த இடத்துக்கும் சன்னியாசி கிராமம் என்ற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர்

அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில், மோகனூர் – 637 015. நாமக்கல் மாவட்டம்

+91- 4286 – 256 100, 94429 57143 (மாற்றங்களுக்குட்பட்டவை)

மூலவர் கல்யாணபிரசன்ன வெங்கட்ரமணர்
உற்சவர் சீனிவாசர்
தாயார் பத்மாவதி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் காவிரி
ஆகமம்/பூசை வைகானஸம்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
புராணப் பெயர் மோகினியூர்
ஊர் மோகனூர்
மாவட்டம் நாமக்கல்
மாநிலம் தமிழ்நாடு

இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர், காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது, கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில், அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். புற்றை உடைத்துப் பார்த்த போது, உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு,”கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர, பத்மாவதி தாயாருக்கு தனிசன்னதி கட்டப்பட்டது.