Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோயில், ஆதி திருவரங்கம்– 605 802 விழுப்புரம் மாவட்டம்.

+91- 4153- 293 677 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

 

மூலவர் ரங்கநாத பெருமாள்
தாயார் ரங்கநாயகி
தல விருட்சம் புன்னாக மரம்
தீர்த்தம் பெண்ணையாறு
ஆகமம்/பூசை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆதிதிருவரங்கம்
மாவட்டம் விழுப்புரம்
மாநிலம் தமிழ்நாடு

 

ஒருமுறை சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து, ஒளி மங்கிப் பொலிவு இழந்து வருந்தினான். பின் தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி, தனது குறைகள் நீங்கப்பெற்றான். தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடித் தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. தேவர்கள் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து, தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை செய்யும்படி கூறினார். தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயம் நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார். பெருமாளும் தேவர்களின் வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி

அருள்மிகு ஆதிகேசவரப்பெருமாள் சுவாமி திருக்கோயில், பவானி – 638 301 ஈரோடு மாவட்டம்.

+91- 4256 – 230 192 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் நாள் முழுதும் திறந்திருக்கும்.

 

மூலவர் ஆதிகேசவரப்பெருமாள்
உற்சவர் கூடலழகர்
தாயார் சவுந்திரவல்லி
தல விருட்சம் இலந்தை
தீர்த்தம் காவிரி, பவானி, அமிர்தநதி
ஆகமம்/பூசை பாஞ்சராத்ரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருநணா
ஊர் பவானி
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

அசுரகுருவான சுக்கிரனின் பொறாமைக்கு ஆளான குபேரன், அவனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, பூலோகத்தில் தலயாத்திரை சென்றான். அவன் இவ்வழியாக சென்றபோது புலி, மான், யானை, சிங்கம், பசு, நாகம், எலி என ஒன்றுக்கொன்று எதிரான குணங்களை உடைய விலங்கினங்கள் ஒரே இடத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள் என பலர் தவம் செய்து கொண்டிருந்தனர். மிருகங்களும் அவர்களுக்கு தொந்தரவு தராமல் அமைதியாக இருந்தன. அதைக்கண்ட ஆச்சர்யமடைந்த குபேரன், கொடிய மிருகங்களும் அமைதியாக இருக்கும் இத்தலம் புனிதம் வாய்ந்ததாகத்தான் இருக்க வேண்டுமென எண்ணினான். இவ்விடத்தில் திருமால், சிவனை தரிசிக்க விரும்பித் தவம் செய்தான். இருவரும் அவனுக்கு காட்சி தந்தனர். குபேரன் அவர்களிடம், “புனிதமான இந்த இடத்தில் தனக்கு அருளியது போலவே எப்போதும் எல்லோருக்கும் அருள வேண்டும்என வேண்டினான். அவனுக்காக சிவன் சுயம்புவாக எழுந்தருளினார். திருமாலும் அருகிலேயே தங்கினார்.

ஆதிகேசவர் சன்னதிக்கு முன்புறம் வேணுகோபாலர் இராதா, இருக்குமணியுடன் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் பசு ஒன்று உள்ளது. இந்த பசுவின் முன்பகுதியில் தலை இருப்பதோடு, பின் உடல் பகுதியில் மற்றொரு தலையும் இருக்கிறது. இவ்வாறு இரண்டு தலைகளுடன் பசு காட்சியளிப்பது வித்தியாசமான அமைப்பு ஆகும்.