Category Archives: முருகன் ஆலயங்கள்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், இராமநாதபுரம்

அருள்மிகு வழிவிடும் முருகன் திருக்கோயில், இராமநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம்.

+91-98948 87503 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

முருகன்

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் ராமநாதபுரம்
மாவட்டம் ராமநாதபுரம்
மாநிலம் தமிழ்நாடு

தற்போது கோயில் உள்ள இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அரசமரம் இருந்தது. மரத்தின் கீழ் ஒரு சிறிய வேல் நடப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டு வந்தது. அருகிலேயே கோர்ட் இருந்ததால் விசாரணைக்காக வருபவர்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டும் என வேண்டிச் செல்வார்கள். சொத்து வழக்குகளில் சிக்கி, வாழ வழியற்று நிற்பவர்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கிய நிரபராதிகள் எல்லாம் இந்த முருகனை வணங்கி வாழ வழிபெற்றனர். எனவே வழிவிடும் முருகன் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரை வந்து வழிபட்டு செல்லும் பக்தர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்க்கை முழுவதும் துணை வருவதாகவும் நம்பிக்கை உள்ளது.

பொதுவாக கோயில்களில் நுழைந்தவுடன் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் இருப்பார்கள். விநாயகரை முதலில் வணங்கி விட்டு கோயிலுக்குள் சென்று திரும்பி வரும் போது முருகனை வணங்குவது போன்ற அமைப்பு இருக்கும். ஆனால், இங்கே கர்ப்பகிரகத்தில் முருகனும் விநாயகரும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக மிக சிறப்பு. இத்தகைய படைப்பை மிக அரிதாகவே காண இயலும்.

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம்

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயில், பாகசாலை, மணவூர் வழி, அரக்கோணம், சென்னை மாவட்டம்.

 

உலக உயிர்களை உய்விப்பதற்காகவே கருணையே வடிவான கந்தப் பெருமான் தோன்றினாள் என்பதை கந்தபுராணம் சிறப்பித்துக் கூறுகிறது. அத்தகைய முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள பழம்பெரும் பதிகளில் ஒன்று, பாகை என வழங்கும் பாகசாலையாகும். குன்று தோராடும் குமரக்கடவுள் இங்கு கங்கை நதிக்கு இணையான, குசஸ்தலை ஆற்றின் கரையில் கோயில் கொண்டுள்ளார்.

ஆள் உயரத்திருமேனியுடன், நான்கு திருக்கரங்களுடன் பிரமசாஸ்தா எனும் கம்பீரமான திருக்கோலத்தில் பாலசுப்ரமணியன் எனும் திருநாமம் கொண்டு மந்திர மயிலையும், சக்தி வடிவேலையும் தாங்கித் தம்மை தரிசிப்போர் பரவசப்படும் விதத்தில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் வள்ளலாகக் காட்சி தருகிறார். பிரம்ம தேவன், நாரதர், சித்ரகுப்தன், அகத்தியர் ஆகியோர் இங்கு முருகனிடம் உபதேசம் பெற்றனர். நாக கன்னியர்கள், சித்தர்கள், மகரிஷிகள் ஆகியோர் முருகனை வழிபட்டு வரங்கள் பெற்றனர் என மச்சபுராணம், கூர்ம புராணம், பவிஷ்ய புராணம் போன்ற பழம்பெரும் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.