Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர்

அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில், மருதூர், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 7- 10 மணி வரை, மாலை 5-8 மணி வரையிலும் கிருஷ்ணரை தரிசனம் செய்யலாம்.

மூலவர்

நவநீதகிருஷ்ணன்

தல விருட்சம்

மருதமரம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

மருதூர்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

கிருஷ்ணன் குழந்தையாக இருந்த போது, அவனது தாய் மருத மரத்தில்தான் உரலில் கட்டி போட்டார். கிருஷ்ணனோ அந்த உரலை இழுக்க மருத மரம் இரண்டு துண்டாகி, அதிலிருந்த தேவர்கள் முக்தியடைந்தார்கள். மருத மரங்கள் இப்பகுதியில் அதிகம் இருப்பதால் இந்த ஊர் மருதூர் ஆனது. மருதமரம் நிற்கும் இடங்களில் கிருஷ்ணன் கோயில் அமைக்க வேண்டும் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்தக் கோயிலும் அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகள் உள்ளன. இவை அனைத்தும் திருநெல்வேலியை ஒட்டிய பகுதிகளே. நவதிருப்பதி தரிசனத்துக்காக செல்பவர்கள், மருதூர் நவநீதகிருஷ்ணரையும் தரிசித்து வரலாம்.

கோவிந்தா என சொன்னால் குழந்தை வரம் தரும் கிருஷ்ண சுவாமி, திருநெல்வேலி மாவட்டம் மருதூரில்அருள்பாலிக்கிறார். தாமிரபரணி நதி புனிதமான கங்கைக்கு நிகரானது. இந்நதியின் கரையிலுள்ளது மருதூர் கிராமம். இவ்வூர் அணைக்கட்டின் அருகில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டது நவநீத கிருஷ்ணன் கோயில்.

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில்

அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில், மன்னார்கோயில், திருநெல்வேலி மாவட்டம்.

+91- 4634 – 252 874 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

வேதநாராயணப்பெருமாள்

உற்சவர்

ஸ்ரீ ராஜகோபாலர்

தாயார்

ஸ்ரீ தேவி, பூதேவி

தல விருட்சம்

பலா

தீர்த்தம்

பிருகுதீர்த்தம்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

வேதபுரி

ஊர்

மன்னார்கோயில்

மாவட்டம்

திருநெல்வேலி

மாநிலம்

தமிழ்நாடு

தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதியானது முன்பு பலா மரங்கள் நிறைந்திருந்த அடர் வனமாக இருந்தது. பெருமாளின் அடியார்களான பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆகியோர் அவரின் திருப்பாதம் பணிந்து பல இடங்களிலும் அவரைத் தரிசனம் செய்து வந்தனர். அவ்வாறு வந்த அவர்கள் இவ்வனப்பகுதிக்கு வந்து சுவாமியை நோக்கித் தவம் புரிந்து தமக்கு அருட்காட்சி தந்து அருள்புரியும்படி வேண்டினர். அவர்களின் தவவலிமையைக் கண்டு மகிழ்ந்த பெருமாள் அவர்களுக்கு இவ்விடத்தில் பிரசன்னமாகத் தோன்றி அருட்காட்சி தந்து அருள்புரிந்தார். இதனால், அகம் மகிழ்ந்த பிருகு மற்றும் மார்க்கண்டேய முனிவர்கள் தமது குரலுக்கு செவிசாய்த்து அருள்புரிந்தது போலவே இவ்விடத்தில் வீற்றிருந்து தன்னை நோக்கி வரும் பக்தர்களுக்கும் காட்சி தந்து அவர்களின் இல்வாழ்வு சிறக்கும்படியாக அருள்புரிய வேண்டும் என வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் இவ்விடத்தில் வேதங்கள் அருளும் வேதநாராயணனாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் இக்கோயிலை எடுத்துக்கட்டி சீரமைத்துள்ளனர்.