Category Archives: பாடல் பெறாதவை

நடராஜர் கோயில், நெய்வேலி

அருள்மிகு நடராஜர் கோயில், நெய்வேலி, கடலூர் மாவட்டம்.

+91-4144-223 500, 94438 43912, 94423 88832

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் நடராஜர் (அழகிய திருச்சிற்றம்பலமுடையான்)
அம்மன் சிவகாமி(ஓசை கொடுத்த நாயகி)
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் நெய்வேலி டவுன்ஷிப்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,”மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார். இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு, “அழகிய திருச்சிற்றம்பலமுடையான்என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி ஓசை கொடுத்த நாயகிஎன்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நடராஜர் திருக்கோயில், லிங்கிச் செட்டித் தெரு, சென்னை

அருள்மிகு நடராஜர் திருக்கோயில், லிங்கிச் செட்டித் தெரு, சென்னை.

காலை 7 மணியிலிருந்து 10 மணி வரையிலும்; மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

சென்னை லிங்கிச் செட்டித் தெருவிலுள்ள நடராஜர் திருக்கோயில், தில்லை நடராஜப் பெருமானின் ஆலய அமைப்பில் அமைந்துள்ளது. வடசிதம்பரம் என அழைக்கப்படும் இக்கோயில், கிழக்கிந்திய கம்பெனியில் தங்கக்காசுகள் சரிபார்ப்பு அதிகாரியாகப் பணியாற்றிய பக்தர் ஒருவரால், 1776 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சென்னையில், வடக்குக் கடற்கரையில், மேற்கு நோக்கி எழுப்பப்பட்ட முதல் திருக்கோயில் என்ற பெருமையும் இதற்குண்டு.

சாரகாள விமான அமைப்பில், மேற்கு நோக்கிய முகப்பு கோபுரம் நம்மை வரவேற்கிறது. நடுவில் நடராஜப்பெருமானும், இடப்பக்கம் சிவகாம சுந்தரியும், வலப்பக்கம் விநாயகரும் அழகிய சுதை உருவங்களாக முகப்பு கோபுரத்தை அலங்கரிக்கின்றனர்.