Category Archives: பாடல் பெறாதவை

கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர்

அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில், குன்னத்தூர், திருநெல்வேலி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோதபரமேஸ்வரர்(கைலாசநாதர்)
அம்மன் சிவகாமி அம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் குன்னத்தூர்
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

ஒரு காலத்தில் குன்னத்தூரை ஆண்ட அரசனுக்குச் சொந்தமான தோட்டத்தில் ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசயக் கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது.

இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச்சொன்னான். இதற்குள் குடத்திலிருந்த தண்ணீரை எடுக்கும் போது அதற்குள் பழம் இருப்பதைக்கண்டு, அந்தப்பழத்தை அரசனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.

கோகர்ணேஸ்வரர்(பிரகதாம்பாள்) திருக்கோயில், திருக்கோக(வ)ர்ணம்

அருள்மிகு கோகர்ணேஸ்வரர்(பிரகதாம்பாள்) திருக்கோயில், திருக்கோக()ர்ணம், புதுக்கோட்டை மாவட்டம்

+91-4322-221084, 9486185259

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் கோகர்ணேஸ்வரர் , மகிளவணேஸ்வரர்
அம்மன் பிரகதாம்பாள், மங்களாம்பிகை
தல விருட்சம் மகிள மரம்
தீர்த்தம் மங்கள தீர்த்தம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் புதுக்கோட்டை
ஊர் திருக்கோக()ர்ணம்
மாவட்டம் புதுக்கோட்டை
மாநிலம் தமிழ்நாடு

காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை வணங்கி ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள்,”தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு, மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடுஎன்று சொல்கிறார்கள். பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிய, “உன்னை சாப்பிட்டுவிடுவேன்என்று இறைவன் பயமுறுத்தினார். காமதேனுவோ,”விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன்என புலியாகிய ஈசனிடம் சொல்லிவிட்டு இங்குள்ள சுவாமியை வணங்க வருகிறது. வணங்கியபின் மீண்டும் தன் சொல்லைக்காக திருவேங்கைவாசல் வருகிறது. அங்கு, காமதேனுவுக்கு, புலியாகிய இறைவனின் காட்சியும், மோட்சமும் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.