Category Archives: பாடல் பெறாதவை

அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை

அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில், பெரியகளந்தை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4259 – 283 503

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆதீஸ்வரர் (ஆதிசேஸ்வரன், ஆதி புரீஸ்வரர் )
உற்சவர் சந்திரசேகர்
அம்மன் பெரியநாயகி
தல விருட்சம் சந்தனம்
தீர்த்தம் பிரம்மதீர்த்தம்
ஆகமம் காமிகம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் குழந்தை நகர்
ஊர் பெரியகளந்தை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

அருணகிரியார் திருப்புகழ்

படைப்புத்தொழிலை செய்வதால், தான்தான் அனைத்திலும் சிறந்தவன் என அகங்காரம் கொண்டிருந்த, பிரம்மன் தனது சாபம் நீங்கப் பல இடங்களிலும் சிவனை வணங்கி வந்தார். அவர், சந்தனமரங்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சுயம்புவடிவில் சிவன் இருந்ததைக் கண்டு அவரை வணங்கி சாபம் நீங்கப்பெற்றார். பிற்காலத்தில், இவ்விடத்தில் கரிகாற்சோழமன்னர் கோயில் எழுப்பினார்.

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர்

அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில், எழுமாத்தூர் – 638 001 ஈரோடு மாவட்டம்.

+91-424-2267578

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆருத்ரா கபாலீஸ்வரர்
அம்மன் வாரணி அம்பாள்
தல விருட்சம் வன்னிமரம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருத்தொண்டீசுவரம்
ஊர் எழுமாத்தூர்
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு

இந்த சிவாலயத்தை கட்டியவர் லட்சுமி காந்தன் என்ற அரசன் என்று சொல்லப்படுகிறது. இந்த அரசன் வேள்வி ஒன்றை நடத்தும் போது, அதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பால்குடங்கள் கீழே வைக்கப்பட்டதும், கவிழ்ந்து கொண்டே இருந்தன. அரசன் இந்த இடத்தை அகழ்ந்து பார்த்தான். அப்போது மண்வெட்டி பட்டு உதிரம் பெருக அரசன் அஞ்சி இறைவனின் திருமேனி கண்டு கோயில் எழுப்பினான் என்று சொல்லப்படுகிறது.

கி.பி.1004 முதல் 1280 முடிய இந்நாட்டை ஆண்ட கொங்கு சோழர்களில் சிலர் கரிகாலன் என்ற பெயரை பெற்றிருந்தனர். அவர்களுள் ஒரு கரிகாற்சோழன் சமய முதலி என்பவருடைய துணையுடன் காவேரி ஆற்றோரத்தில் 36 சிவாலயங்களை அமைத்தார். அந்த சிவாலயங்களில் ஒன்று ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் என்றும் சொல்லப்படுவதுண்டு.

ஆருத்ரா கபாலன் என்ற அரக்கன் இங்கு வாழ்ந்து வந்தான். சிவனால் கொல்லப்பட்ட அவன், உயிர் துறக்கும் தருவாயில் இத்தலத்துக்கு தனது பெயரை சூட்ட வேண்டும் என இறைவனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தான். இதனால் இறைவனுக்கு ஆருத்ரா கபாலீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.