Monthly Archives: January 2012

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91-4651 – 250706, 233270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமார சுவாமி

உற்சவர்

மணவாளகுமரன்

தலவிருட்சம்

வேங்கை மரம்

தீர்த்தம்

தெப்பக்குளம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

வேள்விமலை

ஊர்

வேலிமலை, குமார கோயில்

மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் பழமையான கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.

அருள்மிகு குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்

அருள்மிகு குமரன் திருக்கோயில், நீலா தெற்கு வீதி, நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம்.

+91 99941 98391, 94429-29270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

மெய்கண்டமூர்த்தி

பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர்

நாகப்பட்டினம்

மாவட்டம்

நாகப்பட்டினம்

மாநிலம் தமிழ்நாடு

இந்தக் கோயிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப்பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் அளித்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். இந்தக் கோயிலில், முருகனுக்கு மெய்கண்டமூர்த்திஎன்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில்என்றானது. நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்கக் கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.