Monthly Archives: November 2011

வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி

அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி.

+91-413-233 6686

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வேதபுரீசுவரர்
அம்மன் திரிபுரசுந்தரி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் வேதபுரிபுதுச்சேரி
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

புதுவையின் கடற்கரையில் இருந்து மேற்கே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பெரிய பிராமணர் வீதி, சிறிய பிராமணர் வீதி, காந்தி வீதி, மாதா கோயில் வீதி இவற்றிற்கிடையே சுமார் 238 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோயில் சிறப்புடன் விளங்கியது.

இத்திருக்கோயில் விபவ ஆண்டு ஆவணி மாதம் 20ம் தேதியன்று (1748)ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டதென்று ஆனந்த ரங்கர் நாள்குறிப்பில் இருந்து அறிய முடிகிறது. இப்படி பாழாகிப்போன இத்திருக்கோயில் கி.பி. 1788 ல் (இன்று காந்தி வீதியில் உள்ளது) மீண்டும் திவான் கந்தப்ப முதலியாரின் பெருமுயற்சியாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் கட்டப்பட்டது.

வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை

அருள்மிகு வேதநாயகி உடனுறை அருள்மிகு வேதநாத சுவாமி திருக்கோயில், வீரப்பராசாம்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம்

எண்ணற்ற கோயில்களை உடைய, ஆன்மிகக் களஞ்சியம் எனப் போற்றப்படும் பெருமைபெற்ற நகரம் காஞ்சிபுரம்.

நமது முன்னோர்கள் நமக்கு அளித்த சொத்துகள் மிக பழமைவாய்ந்த திருக்கோயில்கள் ஆகும். பாழடைந்த நிலையிலும், பொலிவும், கம்பீரமும் குன்றாது நிற்கும் மிகப் பெரிய திருக்கோயில்கள் பல; அன்னியர்களின் படையெடுப்பின்போது சூறையாடப்பட்டதாலும், இடிக்கப்பட்டதாலும் அழிந்து மண்ணோடு மறைந்து போயின பல தெய்வீகக் கலைக் கருவூலங்கள். இத்திருக்கோயில்கள் பல கவனிப்பாரற்று, விளக்கு ஏற்றக்கூட வழியில்லாமல் கிடக்கின்றன.