Monthly Archives: July 2011

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி– 612301 தஞ்சாவூர் மாவட்டம்.+91- 94435 25365 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
தல விருட்சம் புன்னை மரம்
தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் பூதப்புரி
ஊர் திருப்புள்ள பூதங்குடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது கழுகுகளின் அரசனான ஜடாயு அவனிடம் போரிட்டார். அப்போது ஜடாயுவை ராவணன் வாளால் வெட்டினான். ஜடாயு ராமா, ராமாஎன முனகியபடி குற்றுயிராக கிடந்தார். அந்த வழியே வந்த இராம, இலட்சுமணர்கள் முனகல் சத்தத்தை கேட்டு அருகில் சென்று பார்த்தனர். ஜடாயு, ராவணன் சீதையை கவர்ந்து சென்ற விஷயத்தை கூறிவிட்டு உயிர் துறந்தார். இதைக்கண்டு வருந்திய இராமன் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார். ஈமக்கிரியை செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால் மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே ராமனுக்கு உதவிபுரிவதற்காக சீதையின் மறு அம்சமாகிய பூமாதேவி காட்சியளித்தாள். அவளோடு இணைந்து ஜடாயுவிற்கு செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தார். இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் இத்தலத்தில் கோயில் அமைக்கப்பட்டது.

அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர்

அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் – 614 202, தஞ்சாவூர் மாவட்டம்.+91- 93443 – 03803, 93452 – 67501 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வையம்காத்த பெருமாள்
உற்சவர் ஜெகத்ரட்சகன்
தாயார் பத்மாசனவல்லி
தல விருட்சம் பலா
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
ஆகமம் வைகானஸம்
பழமை 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் சங்கமாபுரி, தர்ப்பாரண்யம்
ஊர் திருக்கூடலூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமியைப் பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து, பாதாளத்திற்குள் சென்று அவளை மீட்டு வந்தார். பெருமாள் இத்தலத்தில் தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தலவரலாறு கூறுகிறது. இதனை உணர்த்தும் விதமாக திருமங்கை யாழ்வார் இத்தலத்தை புகுந்தானூர்என்று சொல்லி மங்களாசாசனம் செய்துள்ளார். வையகத்தை (பூமியை) காத்து, மீட்டு வந்தவர் என்பதால் இவர் வையங்காத்த பெருமாள்எனப்படுகிறார்.