Monthly Archives: July 2011

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர்

அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், திருஆதனூர் – 612 301. பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 435 – 2000 503 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆண்டளக்கும் ஐயன்
உற்சவர் ஸ்ரீரங்கநாதர்
தாயார் பார்க்கவி
தல விருட்சம் புன்னை, பாடலி
தீர்த்தம் சூர்ய, சந்திர தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் ஆதனூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையைத் தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூவுலகில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்தார்.

தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண் டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி நான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளைத் திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்என்றார். அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர்

அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருக்கோஷ்டியூர் – 630 211, சிவகங்கை மாவட்டம்.

+91- 4577 – 261 122, 94862 – 32362 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சவுமியநாராயணர்
தாயார் திருமாமகள்
தீர்த்தம் தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருக்கோட்டியூர்
ஊர் திருக்கோஷ்டியூர்
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். இரணியன் பிரம்மாவிடம், தன்னை தெய்வங்களோ, தேவர்களோ, மனிதர்களோ, மிருகங்களோ அழிக்க இயலாத அளவுக்கு வரம் பெற்றிருந்தான்.

எனவே, ஒரு வித்தியாசமான உருவத்தை எடுக்க வேண்டியது பற்றி தீவிரமாக ஆலோசிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் பயந்த முனிவர்கள், இரண்யனின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.