Monthly Archives: July 2011

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், கண்டியூர்– 613202. தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 93446 08150 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
உற்சவர் கமல நாதன்
தாயார் கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் கபால மோட்ச புஷ்கரிணி
ஆகமம் வைகானசம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கண்டன க்ஷேத்திரம், பஞ்ச கமல க்ஷேத்திரம்
ஊர் கண்டியூர்
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் உண்டு. இதே போல் பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்த காலம் அது. அதனால் சிவனுக்கு ஈடாகத் தன்னையும் நினைத்து கர்வத்துடன் பிரம்மா செயல்பட்டு வந்தார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் நடுத்தலையைக் கிள்ளியெறிந்தார். அதனால் சிவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தைத் தொலைக்க, கையில் ஒட்டிய பிரம்மனின் கபாலத்துடன் தீர்த்த யாத்திரை கிளம்பினார். ஒரு இடத்தில் அந்த கபாலம் விழுந்தது. அங்கே விஷ்ணு இருந்தார். அந்த தலமே பூரணவல்லி தாயார் சமேத ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்.

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், கோயிலடி (திருப்பேர் நகர்) – 613105 தஞ்சாவூர் மாவட்டம்.

+91- 4362 – 281 488, 281 460, 281 304 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அப்பக்குடத்தான்
உற்சவர் அப்பால ரங்கநாதர்
தாயார் இந்திரா தேவி, கமலவல்லி
தல விருட்சம் புரச மரம்
தீர்த்தம் இந்திர புஷ்கரணி
ஆகமம் பாஞ்சராத்ரம்
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் திருப்பேர்
ஊர் கோவிலடி
மாவட்டம் தஞ்சாவூர்
மாநிலம் தமிழ்நாடு

உபமன்யு என்ற மன்னன் கோபக்கார துர்வாசரின் சாபத்திற்கு ஆளாகி, தன் பலமிழந்தான். தன்னை மன்னித்து சாப விமோசனம் தரவேண்டி துர்வாசரிடம் மன்றாடினான். அதற்கு துர்வாச முனிவர்,”மன்னா. பலசவனம் எனப்படும் இத்தலத்தில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உனது சாபம் தீரும்என்றார்.

இதன்படி மன்னன் கோயிலின் அருகிலேயே ஒரு அரண்மனை கட்டி அன்னதானம் செய்து வந்தான். இந்த அன்னதானம் நீண்ட நாள் நடந்தது. ஒரு நாள் வைகுண்டநாதனான ஸ்ரீமன் நாராயணன், வயதான அந்தணர் வேடத்தில் இங்கு வந்து அன்னம் கேட்க, அவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.