Monthly Archives: June 2011

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம்

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்

+91-4254 – 272 900

காலை 8 மணி முதல் 6 மணி வரை கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்

மூலவர்: – காரணவிநாயகர்

பழமை: – 500 வருடங்களுக்கு முன்

ஊர்: – மத்தம்பாளையம்

மாவட்டம்: – கோயம்புத்தூர்

மாநிலம்: – தமிழ்நாடு

வரலாறு:

முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள் ஊரில் விநாயகர் கோயில் அமைக்க விரும்பி ஒரு சிலையை மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர். ஓரிடத்தில் வண்டியின் அச்சு முறியவே சிலையை இறக்கிவிட்டு, பழுது பார்த்தனர். மீண்டும் வண்டியில் சிலையைத் தூக்கி வைக்க முயன்ற போது அவர்களால் அசைக்கவே முடியவில்லை. அங்கேயே சிலையை வைத்து சிறு கோயிலும் கட்டினர். ஒருமுறை ஆங்கிலேயர்கள் அவ் வழியே ரோடு அமைப்பதற்காக கோயிலை அகற்றும்படி மக்களிடம் கூறினர். மக்கள் மறுக்கவே, தாங்களே கோயிலை அகற்ற ஏற்பாடு செய்தனர். அன்றுஇரவில் ஒரு ஆங்கில அதிகாரியின் கனவில் ஏராளாமான யானைகள் அவரை விரட்டுவது போல் கனவு வந்தது.

இதனால் மனம் மாறிய அந்த அதிகாரி, கோயில் இருந்த இடத்தில் மட்டும் வளைவாக ரோடு அமைக்க ஏற்பாடு செய்தார். இப்போதும் இவ்விடத்தில் ரோடு வளைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.

+91- 461 232 1486(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – ஆயிரத்தெண் விநாயகர்

பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்

ஊர்: – ஆறுமுகமங்கலம்

மாவட்டம்: – தூத்துக்குடி

மாநிலம்: – தமிழ்நாடு

பாடியவர் – ஆதிசங்கரர் பாடல் பெற்ற தலம்.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருச்செங்காட்டங்குடி வாதாபி விநாயகர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தல விநாயகர் 2300 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது புதுமையான தகவல்.

aayiraththen_vinayakar_koil_aarumukamangalam_koil
மற்ற கடவுள்களை தேடி நாம் போக வேண்டும். ஆனால் விநாயகரோ நம்மை தேடி வருவார். எதுவுமே, இல்லாத இடத்தில் கூட கொஞ்சம் மஞ்சள், ஏன் மணலை பிடித்து வைத்தால் கூட பிள்ளையார் தயார். அப்படி வந்தவர் தான் இந்த ஆயிரத்தெண் விநாயகர்.