Monthly Archives: June 2011

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி

அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோயில், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி-620 001.

+91-431- 270 4621, 270 0971, 271 0484

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மூலவர்: – உச்சி பிள்ளையார்

தீர்த்தம்: – காவிரி

ஆகமம் : – சிவாகமம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – திரிசிராப்பள்ளி

ஊர்: – திருச்சி

மாவட்டம்: – திருச்சி

மாநிலம்: – தமிழ்நாடு

ராமர் ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீடணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர். அயோத்தியில் ராமர் முடிசூட்டு விழா முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீடணன் தெற்கே வந்தான். எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான்.

அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டுச் சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.

அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல்

அருள்மிகு தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில், பழவந்தாங்கல், சென்னை.


தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில் சென்னை பழவந்தாங்கலில் குமரன் தெருவில் இருக்கிறது. தணிகை வேம்படி விநாயகர் என்று பெயர் வரக் காரணம் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ந்தேதி முருகன் தலங்களில் வெகு விமரிசையாக நடக்கும் படி உற்சவத்திற்கு வரலாற்றுப் பின்னணி உண்டு.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் அரசு அதிகாரிகள், ஊர் பெரியவர்கள் மரியாதை நிமித்தமாக ஆங்கிலேய அதிகாரிகளை சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல வேண்டியது மரபாக இருந்தது.

ஆங்கிலேயரிடம் வேலை செய்தாலும் புத்தாண்டு தினத்தில் கை கட்டி நிற்க விரும்பாத அரசு ஊழியர்கள், ஊர் பெரியவர்கள் இந்த தர்ம சங்கடத்தைத் தவிர்க்கும் விதமாக உருவாக்கியதுதான் படி உற்சவம்.